முல்லைத்தீவு உடையார்கட்டு நஞ்சுண்டான்குள காட்டுப்பகுதியில் இடம்பெற்றவிருந்த பாரிய மரக்கடத்தலை முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினர் முறியடித்துள்ளனர்.
குறித்த மரக்கடத்தல் சம்பவம் இன்று(2) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றிருந்த வேளை வன திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு உளவியந்திரம் ஒன்றில் கடத்தப்பட்ட பெறுமதியான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .
இதன்போது மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மூவர் தப்பியோடியுள்ளனர்.
இதில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியிலான முதிரை மரதுண்டங்கள், பலகைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவியந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மிக நீண்டநாட்களாக வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்சியாக முல்லைத்தீவு வட்டார வன திணைக்களத்தினரால் அவதானிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
குறைவான ஆளணி வளங்களுடன் இயங்கிவரும் முல்லைத்தீவு வட்டார வன அலுவலகம் பாரிய நிலப்பரப்பை காடாக கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் மரக்கடத்தல்களை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் முறியடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM