"எமக்கான அடுத்த தெரிவு விசேட கூட்டத்தொடரே": பொஸ்கோ சிறப்பு செவ்வி

Published By: J.G.Stephan

02 Mar, 2020 | 04:54 PM
image

இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கி­யுள்ள நிலையில், அர­சாங்­கத்தின் பொறுப்­புக்­ கூ­றலை வலி­யு­றுத்­து­வ­தற்கு விசேட கூட்­டத்­தொடர் ஒன்றை நடத்­து­மாறு இணை அனு­ச­ரணை வழங்­கிய நாடு­க­ளி­டத்தில் கோரு­வதே பாதிக்­கப்­பட்ட தரப்­புக்கு உடன் காணப்­படும் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான வழி­யாகும் என்று  தமிழர் இயக்­கத்தின் அனைத்­து­லக வெளி­யு­ற­வுத்­து­றைக்­கான ஒருங்­கி­ணைப்­பாளர் பொஸ்கோ தெரி­வித்தார். 

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொடர் நடைபெற்றுவரும் நிலையில் அதில் பங்­கேற்­றுள்ள அவர் ஜெனீ­வா­வி­லி­ருந்து வீர­கே­சரி வாரவெளி­யீட்­டுக்கு வழங்­கிய சிறப்பு செவ்­வியில் தெரி­வித்தார். 

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மானம் வலு­வற்­ற­தொன்­றாகும் என்று விமர்சிக்­கப்­ப­டு­கின்­ற­மையை எவ்­வாறு பார்­க்கின்­றீர்கள்? 

பதில்:- தமிழர் தாய­கத்தில் அரங்­கேற்­றப்­பட்ட இன அழிப்பின் சாட்­சி­யங்­க­ளாக  இருக்கும் தமிழ் மக்­களால் இந்த ஜெனீவா தீர்­மா­னத்­தினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது முக்­கி­ய­மா­ன­தொரு விடயம் என்ற புரிதல் எமக்கு அவ­சி­ய­மா­கின்­றது. 

காரணம் நாம், இன அழிப்பு நடை­பெற்­றது என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதற்­கான சாட்­சி­யங்­களையும் கொண்­டி­ருக்­கின்றோம். அனால் 'இன அழிப்­பு' ந­டை­பெற்­றது என்ற விடயம் தீர்­மா­னத்தில் இல்லை. அதே­போன்று தான் 'தமிழ்' என்­றொரு வார்த்தை கூட தீர்­மா­னத்தில் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு தீர்­மா­னத்­தினை நாம் எவ்­வாறு ஏற்­றுக்­கொள்ள முடியும். 

இலங்கை அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தீர்­மா­னங்களை நிறை­வேற்­று­கின்­ற­போது மேற்­குலக நாடு­களின் வாரிசு நாடு­க­ளாக இருக்­கின்ற நாடு­க­ளி­டத்தில் தீர்­மா­னத்­தினை வலுப்­ப­டுத்­து­வது குறித்து பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கின்­ற­போது இந்த தீர்­மா­னத்­தினை விடவும் வேறெந்த தீர்­மா­னத்­தினை கொண்­டு­வர முடியும் என்றே பதில் கேள்­வியை எம்­மீது நோக்கி எழுப்­பு­வார்கள். 

ஆகவே, நாம் உரிய அணுகு­மு­றை ­ரீ­தி­யாக எமக்கு உத­வி­ய­ளிக்கக் கூடிய  நாடு­களை நோக்கி எமது விட­யங்­களை நகர்த்திச் செல்­ல­வில்லை. எமக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக யாரு­டைய கத­வு­களைத் தட்ட வேண்­டுமோ அவற்றை நடை­முறை ரீதி­யாக முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை.

ஆனால், மறு­பக்­கத்தில் இலங்கை அர­சாங்­க­மா­னது, தீவி­ர­வா­தத்­தினை முறி­ய­டித்து விட்­ட­தாக உலகம் முழுக்க பிர­சாரம் செய்­கின்­றது. உலகில் பலம்­வாய்ந்த இராஜ­தந்­திர சேவை கட்­ட­மைப்­பு­களை கொண்ட நாடு­களின் பட்­டி­யலில் முதல் பன்­னி­ரண்டு வரு­டங்­க­ளுக்குள் இலங்­கையும் உள்­ளது. அந்­தப் ­பட்­டியலில் வரு­வ­தற்கு  தனது பிர­சா­ரத்­தினை இரா­ஜ­தந்­திர சேவையில் உள்­ள­வர்கள் மற்றும் பலரைப் பயன்­ப­டுத்தி உரிய முறையில் இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

அதற்கு நல்­ல­தொரு உதா­ரணம் கூறு­வ­தென்றால், ஜெனீவா தீர்­மா­னத்தில் 'தீவிர­வா­தத்துக்கு எதி­ரான போர்' என்ற வாக்­கியம் இடம்­பெற்­றி­ருக்­கின்­ற­போதும் 'தமிழ் மக்கள்'என்றோ, 'தமிழ் இனம்' என்றோ, 'இன அழிப்பு' என்றோ எந்­த­வொரு வார்த்தைகளும் இடம்­பெற்­றி­ருக்க­வில்லை. 

ஆகவே நாம், நடை­பெற்­றது ஒரு இன அழிப்பு என்­பதில் உறு­தி­யாக நின்று அதனை தீர்­மா­னங்­களில் உள்­ளீர்ப்­ப­தற்­கு­ரிய நடவ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். அத்­துடன், இலங்கை அர­ சாங்கம் ஒரு­போதும் ஜெனீவா தீர்­மா­னத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என்­ப­திலும் தெளி­வாக இருக்க வேண்டும். 

தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக அல்­லது கண்­து­டைப்­புக்காக வேண்­டு­மானால், இலங்கை அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்தில் எந்­த­வொரு விட­யங்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. நாங்கள் சர்­வ­தே­சத்­திடம் செல்­லப்­போ­கின்றோம் என்று கூறிக்­கொண்­டி­ருக்­கலாம். 

கேள்வி:- ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் ஊடாக இலங்­கைக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­ப­தற்காக காணப்­பட்ட வாய்ப்­பு­களை பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் தவ­ற­விட்­டுள்­ளார்­களா?

பதில்:- ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரில் ஆணை­யா­ளரின் அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர், அவர்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்­ட­வர்­களின் கருத்­து­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­வது வழ­மை­யான விட­ய­மாகும். இது காலம்­கா­ல­மாக இருந்து வரும் ஒரு ஒழுங்­காகும்.

அந்த வகையில், தற்­போது நடை­பெற்றுக்­கொண்­டி­ருக்கும் 43ஆவது கூட்­டத்­தொ­ட­ருக்­கான ஆணை­யா­ளரின் அறிக்கை தயா­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு கடந்த ஜன­வரி 10ஆம் திக­திக்கு முன்­ன­தாக அனைத்து தரப்­பி­ன­ரி­டத்­தி­லி­ருந்தும் சமர்ப்ப­ணங்­களை செய்­வ­தற்கு இய­லு­மாக இருந்­தது. 

குறிப்­பாக பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் உள்­ளிட்ட நீதியை எதிர்­பார்த்­தி­ருக்கும் தரப்­பி­ன­ரா­கிய தமி­ழர்கள் அநீ­திகள், குற்­றச்­சாட்­டுகள் உள்­ளிட்­டவை தொடர்­பான ஆதா­ரங்­க­ளுடன் சமர்ப்­ப­ணங்­களை அக் ­கா­லப்­ப­கு­தியில் செய்­தி­ருக்க வேண்டும். 

அவ்­வாறு செய்­தி­ருந்தால் ஆணை­யா­ளரின் வாய்­மூல அறி­விப்பில் அது­பற்­றிய கரி­ச­னை­களும்  அறிக்­கையில் அவ்­வி­ட­யங்கள் தொடர்­பான பதி­வு­களும் நிச்­ச­ய­மாக இடம்­பெற்­றி­ருக்கும். அது­மட்­டு­மன்றி அந்தப் பதி­வுகள் பொதுச்­சபை வரையில் பிர­தி­ப­லிப்­ப­வை­யா­கவும் இருக்கும். இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமி­ழர்கள் சரி­யாக செயற்­ப­ட­வில்லை. குறிப்­பாக தாய­கத்தில் இது­ பற்­றிய கரி­ச­னை­யா­னது போது­மா­ன­தாக இருக்­க­வில்லை. 

ராஜ­ப­க் ஷவின் ஆட்சி அமைந்­ததன் பின்னர் தென்­னி­லங்­கையைச் சேர்ந்த பல அமைப்­புகள் பல்­வேறு விட­யங்­க­ளையும் சுட்­டிக்­காட்டி ஆணை­யா­ளரின் அலு­வ­ல­கத்­துக்கு எழுத்து­மூ­ல­மான சமர்ப்­ப­ணங்­களை செய்­தி­ருக்­கின்­றன. குறிப்­பாக மனித உரிமை மீறல்கள், அச்­சு­றுத்­தல்கள் போன்ற விட­யங்கள் பற்­றியே அச்­ச­மர்­ப­்பணங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. எனினும், பாதிக்­கப்­பட்ட தரப்­பான தமிழர் தரப்­பி­டத்­தி­லி­ருந்து 25வரை­யி­லான அள­வி­லேயே எழுத்­து­மூ­ல­மான சமர்ப்­ப­ணங்­களே கிடைத்­தி­ருக்­கின்­றன. 

எமது தரப்­பி­லி­ருந்து 200இற்கும் அதி­க­மான சமர்ப்பணங்­களை செய்­தி­ருந்தோம். பாதிக்­கப்­பட்ட தமிழர் தரப்பு அதி­க­மான சமர்­ப­்பணங்­களை செய்­யா­மை­யா­னது மிகப்­பெரும் பின்­ன­டை­வாகும். தமிழர் தரப்­புக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை உயிர்ப்­புடன் சர்­வ­தேச அரங்கில் வைத்­தி­ருப்­ப­தற்கு இந்த சமர்­ப­்பணங்கள் இன்­றி­ய­மை­யா­த­வை­யாக காணப்­ப­டு­கின்­றன.

கேள்வி:- இந்த விட­யத்தில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு வேறு வழிகள் ஏதும் உள்­ள­னவா?

பதில்:- ஆம், ஐ.நா கட்­ட­மைப்பில் வலிந்து காணா­­ம­லாக்­க­ப்பட்டோர், சிறுவர் உரி­மைகள், பெண்கள், 19 வேறு­பட்ட சம­­வா­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் கைச்­சாத்­திட்­டி­ருக்கும். இந்த சம­­வா­யங்கள் ஒவ்­வொன்றும் நான்கு முதல் ஆறு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­த­டவை மீளாய்வு செய்து அறிக்­கை­களை தயா­ரிக்கும். அச்­ச­ம­வா­யங்­களின் கீழ் காணப்­படும் விட­யப்­ ப­ரப்­பு­களை மையப்­ப­டுத்தி  தமிழர் தரப்­பான நாம் சான்­றா­தா­ரங்­களை அவற்­றுக்கு வழங்க வேண்டும். அவ்­வாறு வழங்­கு­கின்­ற­போது அச்­ச­ம­வா­யங்­களின் அறிக்­கை­களில் எமது விட­யங்­களை பதிவு செய்து கொள்ள முடியும். 

இத­னை­வி­டவும், விசேட நிபுணர் அறிக்கை அல்­லது விசேட குழு அறி­க்கை என்ற கட்­ட­மைப்பும் காணப்­ப­டு­கின்­றது. இந்­தக் ­கட்­ட­மைப்பில் 39பிரி­வுகள் காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு பிரி­வு­களும் ஆண்­டு­தோறும் அறிக்­கை­களை சமர்ப்­பித்­த­வாறே இருப்­பார்கள். அத்­த­ரப்­பி­ன­ருக்கும் தமி­ழர்­களின் விட­யங்­களை தொடர்ச்­சி­யாக அனுப்­பிக் ­கொண்­டி­ருக்­கின்­ற­போது அவர்­களும் தமது அறிக்­கை­யினுள் தமிழர் தரப்பின் விட­யங்­களை நிச்­ச­ய­மாக உள்­ளீர்ப்­பார்கள். 

அது சர்­வ­தே­சத்தில் தமி­ழர்­களின் விட­யத்தின் மீதான கரி­ச­னையை அதி­க­ரிக்கச் செய்யும். இவ்­வா­றான விசேட பிரி­வுகள் அமைக்­கப்­பட்டு 12வரு­டங்­க­ளா­கின்ற நிலையில் இலங்­கை­யி­லி­ருந்து முழு­மை­யான விட­யப்­ப­ரப்­பினைக் கொண்ட 152 விட­யங்­களே தற்­போது வரையில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. 

கேள்வி:- ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றதே? 

பதில்:- ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யிலும் சரி, ஐரோப்­பிய ஒன்­றிய கூட்­டங்­க­ளிலும் சரி காலம்­கா­ல­மாக இலங்கை அர­சாங்கம் இரட்டை நிலைப்­பா­டு­க­ளையே பின்­பற்றி வந்­தி­ருக்­கின்­றன. 

குறிப்­பாக ஐரோப்­பிய தீர்­மா­னங்­களின் போது தாம் அந்த தீர்­மா­னங்­களை ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றே முதலில் கூறு­வார்கள். அதற்­காக சிங்­கள தரப்­பினர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பயன்­ப­டுத்­து­வார்கள். 

பின்னர் தீர்­மா­னங்கள் கடு­மை­யாக அமை­யப்­போ­கின்­றன என்­பதை உணர்ந்­ததும் உட­ன­டி­யாக இலங்கையிலி­ருந்து வரு­கை­தரும் பிர­தி­நி­திகள் வாக்­கு­று­தி­களை வழங்கி இணக்­க­ப்பாட்டின் அடிப்­ப­டையில் தீர்­மா­னங்­களை ஏற்­றுக்­கொள்­வ­தாக கூறிச் செல்­வார்கள். இவ்­வாறு தம்­மீது வரு­கின்ற அழுத்­தங்­களை முறி­ய­டிப்­பார்கள். 

அதே­போன்று தான் ஜெனீவா அரங்­கிலும் ஆரம்­பத்தில் தீர்­மா­னங்­களை எதிர்த்து 25கிலோ­கிராம் எடை­யு­டைய ஆவ­ணங்­களைக் கூட சமர்ப்­பித்­தி­ருந்­தது. அதில் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­தது. அந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­காக உலக வங்­கி­யி­டத்தில் பணத்­தினை பெறு­வ­தையும் நோக்­க­மாக கொண்டே இலங்கை அர­சாங்கம் கடந்த காலத்தில் செயற்­பட்­டது. 

இவ்­வாறு தான் ஒவ்­வொரு தட­வையும் தீர்­மா­னங்கள் வரு­கின்­ற­போது இலங்கை அர­சாங்­கத்தின் அணி­யினர் வருகை தந்து வாக்­கு­று­தி­களை வழங்கிச் செல்­வார்கள். குறிப்­பாக இறு­தி­யாக நடை­பெற்ற ஜெனீவா அமர்­வு­க­ளின்­போது நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கமே இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்ற போதும் அதனை நடைமுறைப்­ப­டுத்­த­வில்லை.

மாறாக, தன்­னி­டத்தில் உள்ள முன்னாள் சிவில் சேவை பிர­தி­நி­திகள், இரா­ஜ­தந்­திர செயற்­பாட்­டா­ளர்கள், புத்­தி­ஜீ­விகள் என்று அணி­யொன்றை தயார் செய்து அவர்கள் ஊடாக ஜெனீவா அரங்கில் முறி­ய­டிப்­புகளை மேற்­கொள்கின்றது. இந்தப் போக்கு தான் தற்­போது வரையில் தொடர்ந்து கொண்டிருக்­கின்­றது. அதன் அடுத்த கட்­ட­மாக ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. இந்த அறி­விப்பால் எதுவும் நடக்­கப்­போ­வ­தில்லை. ஆகவே, தொடர்ந்தும் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையை மையப்­ப­டுத்­திய நகர்வால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் எதுவும் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

கேள்வி:- இலங்­கையின் பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்­து­வ­தற்கு சர்­வ­தேச ரீதி­யாக அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­த­வல்ல உட­னடி சாத்­தி­ய­மான வழி­மு­றை­ ஏதும் உள்ளதா?

பதில்:- இலங்­கையின் பொறுப்­புக்­ கூ­றலை வலி­யுறுத்தும் வகையில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 உள்­ளிட்ட தீர்­மா­னங்கள் இலங்கை உட்­பட மேற்­குல நாடு­களின் இணை அனு­ச­ர­ணை­யு­ட­னேயே நிறை­வேற்­றப்­பட்­டது. ஆகவே, இணை அனு­சரணை வழங்­கிய  பிரித்­தா­னியா, கனடா உள்­ளிட்ட நாடு­கள் ஊடாக விசேட கூட்­டத்­தொடர் ஒன்றை நடத்­து­வ­தற்­கு­ரிய அழுத்­தங்­களை அவ­ச­ர­மாக மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. 

இலங்கை அர­சாங்கம் எந்­த­வொரு பொறி­மு­றைக்கும் இணங்­கு­வ­தற்கு மறுத்­துள்ள நிலையில் இலங்கை விட­யத்­தினை கையாளும் அல்­லது தலை­யீடு செய்யும் மேற்­கு­லக நாடுகள் உட­ன­டி­யாக விசேட கூட்­டத்­தொ­ட­ருக்கு அழைப்பு விடுக்க வேண்டும். அதற்­கான உந்­து­தலை பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரும், தாயக, தமி­ழக, புலம்­பெயர் தரப்­பு­களும் கூட்­டி­ணைந்து மேற்­கொள்ள வேண்டும். 

உதா­ர­ண­மாக, 2017, 2018ஆம் ஆண்­டு­களில் சிரியா, ரோஹிங்­கியா மக்­க­ளுக்­காக விசேட கூட்­டத்­தொ­டர்கள் நடத்­தப்­பட்டன. மேலும், அந்த மக்­களை நேர­டி­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தியே பிரச்­சி­னை­களும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆனால், இலங்கை தமிழ் மக்­களின் பெய­ரினை நேர­டி­யாக குறிப்­பிட்டு இது­வரையில் பிரச்­சி­னைகள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதா­வது இலங்கை தமி­ழர்கள் மீது இன­ அ­ழிப்பு செய்­யப்­பட்­டது, இலங்கை தமி­ழர்­களின் மனித உரி­மைகள் மீறப்­பட்­டன என்று நேர­டி­யாக குறிப்­பி­டப்­ப­டாமை துர­திர்ஷ்­ட­வ­ச­மான நிலை­மை­யாகும். ஆகவே, நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­ட­தைப்­போன்று அதனை வலி­யு­றுத்த மேற்­கொள்ள வேண்டும். 

கேள்வி:- இலங்கை அர­சாங்கம் ரோம் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டாத நிலை­யிலும் அதற்கு ஐ.நா பாது­காப்பு சபையின் சீனா, ரஷ்­யாவின் ஆத­ரவு இருக்­கின்ற நிலை­யிலும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றினை நோக்கி நகர்­வது சாத்­தி­ய­மா­குமா? 

பதில்:- ஐ.நா. பாது­காப்புச் சபை ஊடாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றை நோக்கி இலங்­கையை நகர்த்­து­வது கடி­ன­மாக இருக்­கின்­றது. அதே­நேரம் இலங்கை அர­சாங்கம் ரோம் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டா­மையின் கார­ண­மாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றில் நிறுத்­த­மு­டி­யாது என்ற வாதம் தவ­றா­னது. காரணம் சர்­வ­தேச நீதி­மன்றை நோக்கி இலங்­கையை கொண்டு செல்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய நாம் இது­வ­ரையில் சரி­யாக கையா­ள­வில்லை. 

குறிப்­பாக இனப்­ப­டு­கொலை, மனித உரிமை, மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் உள்­ளிட்­டவை தொடர்­பி­லான சாட்­சி­யங்கள் முறை­யாக தொகுக்­கப்­பட்டு அவற்றை பொது வழக்­க­றிஞர் ஒருவர் ஊடாக 'ஹேக்கில்' உள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றில் உள்ள போர்க்­குற்­றங்கள் தொடர்­பான பிரி­வுக்கும் அதே­நேரம் சாட்­சி­யங்கள், வாழும் நாடு­களின் நீதித்­து­றையின் ஊடாக தாக்கல் செய்ய வேண்டும். 

இத­னை­ய­டுத்து குறித்த பிரிவின் ஊடாக உரிய நாடு­க­ளுக்கு அந்த முறைப்­பா­டுகள் தொடர்­பி­லான விளக்­கங்கள் கோரப்­படும். அதில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­ற­போது விசா­ர­ணைகள் இயல்­பா­கவே முன்­னெ­டுக்­கப்­படும். ஆகவே, தாய­கத்தில் இடம்­பெற்ற விட­யங்கள் தொடர்­பி­லான முழு­மை­யான சாட்சியப்பதிவுகளே அவசியமாக இருக்கின்றன. இதற்கு ஆகக்குறைந்தது தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் தலா ஐவர் வீதம் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. 

கேள்வி:- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்வது குறித்து பாதிக்கப்பட்ட மக்க ளின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளுடன் முதற்தடவையாக பேச்சுக்களை நடத்தி

யிருக்கின்றமையை எவ்வாறு பார்க்கின் றீர்கள்?

பதில்:- பாதிக்கப்பட்ட மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் நடை பெற்ற கூட்டத்தொடர்களில் ஏனைய தரப்புகளின் முடிவுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் வலியுறுத்தல்களுக்கும் மாறான நிலைப்பாடுகளையே கொண்டிருந்தது. குறிப்பாக இலங்கை

யில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை நாம் உள்ளிட்டவர்கள் வலி யுறுத்தியபோது கூட்டமைப்பு தயங்கி நின்றது. ஏறக்குறைய அரசாங்கத்துக்கு ஏதுவான போக்கிலேயே இருந்தது. 

இவ்வாறான நிலையில் தான் தற்போது உறுப்பு நாடுகளிடத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது பற்றி பேசியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். உண்மையிலேயே இருவாரங்களுக்கு முன்னதாக இங்கு

வருகை தந்திருந்த அவர் சந்திப்புகளில் ஈடுபட்டதாக கூறி ஊடக விளம்பரத்தினையே செய்திருந்தார். இதுவரையில் அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியது கூட கிடையாது. ஆகவே, அவர்கள் வெறுமனே வாக்குகளை இலக்காக வைத்து இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்கள். 

இலங்கை அரசாங்கம் தீர்மானத்திலிருந்து விலகுவதாக அறிவித்தபோது சுமந்திரன் கூறியதன் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து உறுப்பு நாடுகளிடத்தில்  பேச்சுக்களை நடத்தியிருந்தால் எந்தவொரு உறுப்பு நாடும் அந்த விடயத்தினை ஏன் ஒரு இடத்தில் கூட பிரதிபலிக்கவில்லை. ஆகவே, அவருடைய கருத்துகள் அடுத்த தேர்தலை மையப்படுத்தியதே ஆகும். 

ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04