அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை ஓரங்கட்டுவதை ஏற்க முடியாது

Published By: J.G.Stephan

02 Mar, 2020 | 04:06 PM
image

'அர­சி­யலில் இதெல்லாம்...'  என்­பது திரைப்­ப­ட­மொன்றில் பேசப்­பட்ட வசனம். இவ்­வ­சனம் மீண்டும் மீண்டும் பல­ராலும் பேசப்­பட்டு வரு­கிற பிர­பல்யம் பெற்ற கூற்­றுங்­கூட. அர­சி­யலில் யாரும் நிரந்­த­ர­மான நண்­பர்­களும் கிடை­யாது எதி­ரியும் கிடை­யாது. இவ்­வ­ச­னமும் அர­சியல் பிரமு­கர்­களால் அடிக்­கடி எடுத்­துக்­காட்­டாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற வரிகள். இப்­பொழுது இந்த இரு சினிமா வச­னங்­க­ளையும் ஒரு செய்­திக்கு பிர­யோ­கித்துப் பார்ப்­பது பொருத்­த­மாக இருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் விடு­தலை முன்­னணி போன்ற ஜன­நா­யக சக்­திகள் மற்றும் சமூகக் குழுக்­க­ளுடன் ஓர­ணி­யாக நின்று அடுத்த பொதுத் தேர்­தலில் களமிறங்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். பலம் பொருந்­திய அணி­யாக இவ்­வ­ணியை உரு­வாக்­குவோம். இக்­கூட்டு, பலம் பெறவும் சேதம் இல்­லாத விட்டுக் கொடுப்புக்கும் நாம் தயார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசியத் தலை­வரும் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ளார்.

கண்­டியில் இடம்­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 29 ஆவது பேராளர் மா­நாட்டில் உரை­யாற்­றும்­போதே அவர் இதை பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்ளார்.

இந்த உரை­யின்­போது மேலும் ஓர் உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார் தலைவர் ஹக்கீம். சிறு­பான்மைக் கட்­சி­களை ஓரங்கட்டும் ஒரு தீவிர முயற்சி தற்­போ­தைய அர­சாங்­கத்தில் அரங்­கேறி வரு­கி­றது. இதி­லி­ருந்து மீட்சி பெற்று எம்மை உறுதி செய்து கொள்­வ­தற்­காக மூன்று கட்­சி­களும் ஒன்றிணைய வேண்­டிய காலத்தின் கட்டாய சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கி­யுள்ளது என்ற தெளி­வான கருத்தை முன்­வைத்­துள்ளார்.

ஹக்­கீமின் இந்தக்­ க­ருத்­தா­னது காலத்தை மைய­மாகக் கொண்­டது மாத்­தி­ர­மல்ல, பொருத்­த­மான நோக்கை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதன் மூலம் அவர் தன்­னை­யொரு தேசிய தலை­வ­ராக நிரூ­பித்­துள்ளார் என்­பது பாராட்­டு­த­லுக்­கு­ரிய விட­ய­மாகும். புதிய அர­சாங்­கத்தின் கொள்­கைகள், கோட்பாடுகள், முன்­ந­கர்­வுகள் அனைத்­துமே நாட்டில் வாழும் தேசிய இனங்­க­ளான தமிழ், முஸ்லிம் சமூ­கத்­தி­னரை உதா­சீனம் செய்து ஒரு பெளத்த மேலா­திக்க அர­சாங்­கத்தை நாட்டில் நிரந்­த­ர­மாக உரு­வாக்­கு­வ­தையே தீவி­ர­மாகக் கொண்­டுள்­ளனர் என்­பதை கடந்த நூறு நாள் பய­ணிப்­பிலும் நடத்திக் காட்­டி­யுள்­ளனர் என்­பது வெளிப்­ப­டை­யா­கவே பேசப்­ப­டுகின்ற விடயம்.

ஜனா­தி­ப­தியின் பத­வி­யேற்பு உரை, சுதந்­திர தின நிகழ்வு என்­ப­வற்­றுடன் அவரின் செயல்­முறை அனைத்­துமே சிறு­பான்மை சமூ­க­மற்ற ஒரு பெளத்த சாம்­ராஜ்­ஜி­யத்தின் சக்­க­ர­வர்த்­தி­யைப்போல் தன்னை பாவனை பண்­ணிக்­கொண்டு நடந்து கொள்­வது நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனத்­தவர்­க­ளுக்கும் கவ­லை­ய­ளிக்­கின்றது.   ஹக்­கீமின் இந்த ­வெ­ளிப்­ப­டுத்­த­லா­னது பின்­வரும் எதிர்­கால நிலை­மை­க­ளையும் போக்­கு­க­ளையும் கவ­னத்­திலும் கருத்­திலுங் கொண்டே, அனு­பவ ரீதி­யாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அவை­யா­வன: நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­த­லா­னது சிறு­பான்மை சமூ­கத்­துக்கு பாரிய சவா­லாக இருக்­கப்­போ­கி­றது. இன்­றைய அர­சாங்கம், நடை­பெ­ற­வுள்ள பொதுத்­தேர்­தலை மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெறு­மாக இருந்தால் அது நாட்­டுக்கு பேரா­பத்­தாக வந்து முடியும். சிறு­பான்மை சமூகம் இன்று எதிர்­கொள்ளும் சவால்­களை முறி­ய­டிக்க வேண்­டு­மாயின் அவர்கள் மத்­தியில் ஒரு பல­மான கூட்டு உரு­வாக்­கப்­பட வேண்டும். நாட்டின் எதிர்­காலம் பயங்­க­ர­மாக இருக்கப் போகி­றது என்ற பயம் காட்­டப்­ப­டு­கி­றது. கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து­ போ­ன­வர்களை எம்­முடன் இணைந்து கொள்­ளும்­படி அழைப்பு விடுக்­கிறேன் என பல்­நோக்கு இலக்குக் கொண்ட அறை கூவலை விடுத்­துள்ளார்.

இதில் ஹக்­கீமின் முத­லா­வது கருத்து முன்­வைப்­பா­னது, நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­த­லா­னது சிறு­பான்மை சமூ­கத்­துக்கு பாரிய சவா­லாக இருக்கப் போகி­றது என்ற விட­ய­மாகும். இதில் ஆழ­மான உண்­மைகள் சொல்­லப்­ப­டு­கி­றது என்­பது ஏதோ­வொரு வகையில் உண்­மை­யா­கவே பார்க்­கப்­ப­ட­வேண்டும். வட­கி­ழக்கை பொறுத்­த­வரை, மக்­களால் அறி­யப்­பட்ட கட்­சி­க­ளா­கவும் செல்­வாக்கு கொண்ட கட்­சி­க­ளா­கவும் காணப்­ப­டு­பவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸு­மாகும். அந்த வகையில் இவற்றின் ஆளு­மை­யையும் செல்­வாக்­கையும் உடைக்க வேண்­டு­மென்­ப­தற்­காக திட்­ட­மி­டப்­பட்ட வியூ­கங்கள் வகுக்­கப்­ப­டு­கின்­றன என்­பது  ர­க­சியம் கலந்த உண்­மை­யாகும்.

குறிப்­பாக, தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பலத்தை உடைத்து விடு­வதன் மூலமே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வுக் கோரிக்­கை­களை நிர்­மூ­ல­மாக்கி விட­முடியு­மென்­ப­துடன் சர்­வ­தேச ரீதி­யாக அர­சாங்­கத்­துக்கு எழும் விமர்­ச­னங்­க­ளையும் கண்­ட­னங்­க­ளையும் ஒரு முடி­வுக்கு கொண்டு வர­மு­டி­யு­மென்று அர­சாங்­கம்  மனப்பால் குடிக்கிறது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே அவர்கள் செயற்­பட்டு வரு­கி­றார்கள்;செயற்­படப் பார்க்­கி­றார்கள் என்­பதை கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பல தட­வைகள் வெளிப்­ப­டுத்தி வரு­கி­றார்கள்.

தமிழ் மக்­களின் நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பதை கூட்­ட­மைப்பு கடந்த ஏழு சகாப்த காலத்­துக்கு மேலாக கூறி வரு­வ­துடன் போரா­டியும் வரு­கி­றார்கள். அது மட்­டு­மன்றி, சர்­வ­தே­ச­ம­யப்­ப­டுத்தி வலி­யு­றுத்­தியும் வரு­வது சக­லரும் அறிந்த விடயம். இவ்­வா­றா­ன­தொரு போராட்­டத்தை மூடி மறைத்து அதை இல்­லாது ஒழிக்கும் முயற்­சியில் கடு­மை­யாக உழைத்து வரும் இன்­றைய அர­சாங்கம் கூட்­ட­மைப்பின் பலத்தை உடைக்க வேண்­டு­மாயின், அதன் பாரா­ளு­மன்ற பலத்தை பல­வீ­னப்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாடு கொண்­ட­தாக காணப்­ப­டு­வதன் கார­ண­மா­கவே பல விட­யங்­களில் தந்­தி­ரோ­பா­ய­மாக காய்­களை நகர்த்தப் பார்க்­கி­றது.

முஸ்லிம் சமூ­கத்தை சிறை பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு ஒரு விவ­கா­ர­மாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது ஏப்ரல் தாக்­குதல் சம்­ப­வ­மாகும். இவற்றை சாட்­டாக வைத்­துக்­கொண்டே முஸ்லிம் சமூ­கத்­தையும் அவர்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளையும் பல­வீ­னப்­ப­டுத்தப் பார்ப்­பது மட்­டு­மல்ல, ஓரங்­கட்­டு­வ­தற்­கான கடு­மை­யான முயற்­சிகளும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் எதிர்­வரும் பொதுத் தேர்­த­லா­னது இவ்­விரு கட்­சி­க­ளுக்கும் பாரிய சவா­லாக இருக்­கப்­போ­கி­றது என்­பதை யாரும் மறு­த­லிக்க முடி­யாது.

கடந்த தேர்தல் காலங்­களில் கூட்­ட­மைப்பு மாற்றுத் தரப்­பி­ன­ருடன் கூட்­டணி அமைத்து தேர்தலில் போட்­டி­யிட வேண்டிய சூழ்­நி­லை­யொன்று உரு­வா­க­வில்லை. ஆனால், முஸ்லிம் காங்­கி­ரஸைப் பொறுத்­த­வரை தேசியக் கட்­சி­க­ளு­டனும் சகோ­தர தரப்­பி­னர்­க­ளு­டனும் இணைந்து போட்­டி­யிட்ட நிலை­மை­ இ­ருந்­தது. குறிப்­பிட்டு சொல்­வ­தானால் தேசியக் கட்­சி­களின் சின்­னத்­துக்குள் முடங்­கிப்­போன காலமும் உண்டு. ஆனால் இன்­றைய சூழ்­நி­லையில் பழைய நிலை­மை­களை ஏற்றுச் செல்­வது என்­பது ஆபத்­தானதென  உண­ரப்­பட்­டி­ருப்பதனா­லேயே தலைவர் ரவூப் ஹக்கீம் சிறு­பான்மைக் கட்­சி­களின் கூட்டை விரும்பும் உடன்­பாட்­டுக்கு வந்­தி­ருப்­பது இன்­றைய நிலையில் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய கருத்தே.

ஆனால் முஸ்லிம் காங்­கி­ரஸ் தலை­வரின் இந்த விரி­வான பார்வை வர­வேற்­கப்­பட வேண்­டி­யது காலத்தின் கட்டாயமாக இருந்­தாலும் அதில் ஏற்­ப­டக்­கூ­டிய சாதக, பாதக நிலை­மைகளையும் ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் சமூக அமைப்­பு­களை ஒன்று திரட்டி எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்­கான பல­முள்ள ஜனநாயக சக்­தி­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டு­மென தலைவர் கூறி­யி­ருப்­பது காலத்தின் தேவை மாத்­தி­ர­மன்றி, பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மு­மாகும். ஆனால் இந்த கனவு நிறை­வே­றுமா? பூனைக்கு மணி கட்­டு­வது யார்  என்­பது கடு­மை­யான கேள்வி மாத்­தி­ர­மல்ல, கஷ்­ட­மான எதிர்பார்ப்­புமாகும்.

ஹக்கீமின் பகி­ரங்­க­மான இந்த அழைப்பை மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் உட­ன­டி­யா­கவே மறுத்து அறிக்­கை­யொன்றை மறு­நாளே விடுத்­துள்­ள­னர். அந்த அறிக்­கையில் பொதுத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனோ அல்­லது முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனோ இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில் இது­வரை ஜே.வி.பி அவ­தானம் செலுத்­த­வில்லை. அவ்­வா­றா­ன­தொரு நிலைப்­பாட்­டில் நாமுமில்லை. பொதுத் தேர்­தலில் ஜே.வி.பி தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியிலேயே நாம் போட்­டி­யி­டுவோம் என அடித்துக் கூறி­யுள்­ளனர்.

ஜே.வி.பியின் இந்த அ­றிக்­கையின் மூலம் சில அவ­தா­னிப்­பு­களை எம்மால் சுட்டிக் காட்ட முடியும். சிறு­பான்மைக் கட்­சி­களை கூட்டிணைக்கும் முயற்­சியில் அவர்கள் எக்­கா­லத்­திலும் உடன்­பாடு காட்­ட­வில்லை என்­பது ஒரு புற­மி­ருக்க, பெரும்­பான்­மை­ய­ளவில் சிங்­களப் பிர­தே­சத்­தையும் சிங்­கள வாக்­கா­ளர்­க­ளையும் நம்­பி­யி­ருக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் சமஷ்டி முறை­யி­லான சுயாட்சி கோரும் கூட்­ட­மைப்பும் ஏப்ரல் பயங்­க­ர­வா­திகள் என பெளத்த அடிப்­ப­டை­வா­தி­களால் ஓரங்­கட்­டப்­பட்டு வரும் முஸ்லிம் மக்­களை ஆத­ர­வா­ளர்­க­ளாகக் கொண்ட முஸ்லிம் கட்­சி­க­ளு­டனும் கூட்­டணி அமைத்து தேர்­தலில் நிற்­கக்­ கூ­டிய புரட்­சி­ம­ய­மான கட்­சி­யாக மக்கள் விடு­தலை முன்­னணி மாற்­று­நிலை பெற்­றி­ருப்­ப­தாக இன்னும் நம்­பப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில், மக்கள் விடு­தலை முன்­னணி அக்­கூட்­டுக்கு உடன்­ப­டு­மாக இருந்தால் மிக மகிழ்ச்­சி­யோடு கைநீட்டி வர­வேற்­கப்­பட வேண்­டிய பாரிய மாற்­ற­மா­கவே வர­லாறு நினைத்துக் கொள்ளும். அது­வு­மின்றி, நாட்டில் மிகக் குறைந்­த­ளவு ஆச­னங்­க­ளையே சுவீ­க­ரித்துக் கொள்ளும் மக்கள் விடு­தலை முன்­னணி அடுத்த பாரா­ளு­மன்றில் ஆகக் குறைந்தது ஒரு எதிர்க்­கட்­சி­யா­க­வா­வது தன்னை உயர்த்திக் கொள்ள வேண்­டு­மாயின், மிக சாது­ரி­ய­மா­கவும் சாணக்­கி­ய­மா­க­வுமே நடந்து­கொள்ள எத்­த­னிக்கும்.

கூட்­ட­மைப்­புக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் ஒரு கூட்டு உடன்­பாடு ஏற்­ப­டுமா என்­பது இன்­னு­மொரு சந்­தே­கத்­துக்­கு­ரிய கேள்வி. அவ்­வாறு நடக்­கு­மாக இருந்தால் அந்த மாற்றம் சாதனைப் புத்­த­கத்து பதி­வு­க­ளாக மாறும் என்­பது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரிய விட­யந்தான். காரணம் கடந்த கால அனு­ப­வங்­களைக் கொண்டு இது பார்க்­கப்­பட வேண்­டிய விடயம். உதார­ண­மாக கடந்த 2013 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தல் முடி­வுகள் வந்­ததன் பின் இரு கட்­சிகளுக்­கி­டை­யி­லான உடன்­பா­டு கள்  கடு­மை­யான பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. முடிவு கசப்­பா­ன­தா­க­வே­யி­ருந்­தது. 2015 ஆம் ஆண்டு தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டதன் கார­ண­மாக கிழக்கு மாகாண ஆட்­சியில் சடு­தி­யான மாற்­றங்கள் நிகழ்ந்­தன. 11 கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் கிழக்கு மாகா­ணத்தில் இருந்தும் கூட, முத­ல­மைச்சர் கதி­ரையை முஸ்லிம் காங்­கிரஸ் தன் வயப்­ப­டுத்திக் கொண்­டு­விட்­டது என்ற ஆதங்கம் கொண்­ட­வர்­க­ளா­கவும் அதி­ருப்­தி­பட்­ட­வர்­க­ளா­கவும் கிழக்கு தமி­ழர்கள் காணப்­பட்­டார்கள். இந்த அர­சியல் சக்­க­ரத்­தினால் கூட்­ட­மைப்பு பல விமர்­ச­னங்­க­ளுக்கும் கண்­ட­னங்­க­ளுக்கும் ஆளாக்­கப்­பட்­டது.

இவை ஒரு­பு­ற­மி­ருக்க, கிழக்கு மாகா­ணத்தில் நிகழ்ந்த இந்த அர­சியல் சக்­கரம் கார­ண­மா­கவே பல அமைப்­பு­களும் ஒரு சில கட்­சி­களும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக உரு­வாக கார­ணங்­க­ளாக அமைந்­தன. இது தவிர, முஸ்லிம் காங்­கிரஸ் கூட்­ட­மைப்பு ஒரு உடன்­பாட்­டுக்கு வந்து கூட்­ட­ணி­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் அது வர­வேற்­கக்­கூ­டிய நிகழ்­வாக பார்க்­கப்­பட்­டாலும் யதார்த்­தத்தில் தேர்தல் களத்தில் பல போட்­டி­களும் பிரச்­சி­னை­களும் வெடிக்கக் கார­ண­மா­கலாம். உதா­ர­ண­மாக வன்­னித்­தேர்தல் தொகுதி, திரு­கோ­ண­மலை மாவட்டம், அம்­பாறை மாவட்டம் போன்ற மாவட்­டங்­களில் எதை விட்­டுக்­கொ­டுத்து எதைப் பெறு­வது, எக்­கட்­சியை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­து­வது விட்­டுக்­கொ­டுப்­பது என்­பதில் எல்லாம் பாரிய சங்­க­டங்­க­ளையே உரு­வாக்கும்.

வடக்கைப் பொறுத்­த­வரை கூட்­டணி எளி­மை­யான வாய்ப்­பாடு கொண்­ட­தாக அமை­யலாம். ஆனால் கிழக்­கி­லுள்ள மூன்று மாவட்­டங்­களைப் பொறுத்­த­வரை பாரிய சவால் நிலை­களை உரு­வாக்கும் என்­பது தெளி­வாக தெரியும் விடயம். அதுவு­மின்றி கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை, இம்­முறை தேர்­தலில் தன்­னை­ ஒரு பல­முள்ள சக்­தி­யாக மாற்ற வேண்­டிய தேவை உரு­வா­கி­யுள்­ளது. அது எவ்­வாறெனில், வட­கி­ழக்­கி­லுள்ள கூடுதல் ஆச­னங்­களை தம­தாக்கிக் கொள்ள வேண்டும். அது­மட்­டு­மின்றி பெறக்­கூ­டிய தேசி­யப் ­பட்­டியல் ஆச­னங்­களை சுதா­க­ரித்துக் கொள்ள வேண்டும். இவ்­வா­றான சூழலில் கூட்­டணி அமைத்து பெறு­வது என்­பது சாத்­தி­ய­மான விட­யமா என்­பதை ஆழ்ந்து யோசிக்­கவே செய்யும்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ஹக்கீம், மூன்று கட்­சிகள் சேர்ந்து ஒரு பல­மான கூட்­ட­ணியை அமைப்போம் என்று கூறி­யி­ருப்­ப­துடன் இதற்­காக எந்­த­வொரு விட்­டுக் ­கொ­டுப்­புக்கும் தானும் தனது கட்­சியும் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யி­ருப்­பது அவ­ரு­டைய பெருந்­தன்­மையை மாத்­தி­ர­மல்ல ஓர் உத்­தம தலை­வ­ருக்­கு­ரிய சிறப்­பாண்­மையை எடுத்துக் காட்­டு­கி­றது.

ஆனால், இந்த விடயம் இரு சமூ­கத்தின் நன்மை சார்ந்­தது மட்டுமல்ல அடிப்­படைப் பிரச்­சினை சார்ந்­ததுமாகும். இவ்­விரு சமூ­கமும் ஏற்றுக் கொள்­வது தவிர்த்து பல விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கும் தம்மை தயார்­படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த கால கசப்­பான அனு­ப­வங்கள் இரு சமூ­கத்­துக்கு மத்­தி­யிலும் பாரிய உடைவு நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. ஒருசில தலை­வர்­களின் இனத்­து­வ­மான நட­வ­டிக்­கைகள் கார­சா­ர­மான முரண்­பா­டு­க­ளுக்கு கார­ண­மா­கி­யி­ருந்­துள்­ளன. இந்த கசப்பு நிலை மாற்­றப்­பட வேண்டும். அந்த மாற்­றத்­துக்­கான ஒரு கதவு திறக்கப்படுவதாகவே இது இருக்­கலாம்.

நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்று சிங்­களப் பெரும்­பான்­மை­யுடன் ஓர் ஆட்சி அமைக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் இன்­றைய அர­சாங்கம் பகீ­ரதப் பிர­யத்­தனம் செய்து வரு­கி­றது. இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அடுத்த தேர்­தலில்    90 க்கு மேற்­பட்ட ஆச­னங்­களைப் பெற்று ஆட்சி அமைப்­போ­மென சூளு­ரைத்து வரு­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் இந்த எதிர்­பார்ப்பு எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மாகப் போகி­றது என்­பதைப் பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் ஐக்­கிய தேசியக் கட்­சி­க­ளுக்கிடை­யே­ உள்ள இழு­ப­றி­க­ளுக்கு முடிவு காணப்­பட­வில்லை; முரண்­பா­டு­க­ளும் தீர்ந்தபாடில்லை. இத்­த­கைய சூழலில் வெறும் எதிர்­பார்ப்­பு­க­ளாலும் வாய்ச்­ச­வ­டால்­க­ளாலும் வெற்றி கிடைக்கப் போவ­தில்லை. அவ்­வாறு வெற்றி பெற்­றாலும் இவர்­க­ளுடன் ஒன்­று­கூடி பாரா­ளு­மன்றை ஆட்­சிப்­ப­டுத்­தக்­கூ­டிய இணைத்­த­ரப்­பினர் அல்­லது கூட்­டுத்­த­ரப்­பினர் யார் என்­பதில் பல சங்­க­டங்­களே காணப்­ப­டு­கின்­றன.

உதா­ர­ண­மாக தமது நாலரை வருட ஆட்­சி­யையும் அவமே கழித்து விட்டு ஒன்­றை­யுமே செய்ய முடி­யாமல், செய்யத் தெரி­யாமல் ஆட்­சியை இழந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்டுச் சேர்வ­தற்கு சிறு­பான்மைக் கட்­சிகள் தயாரா என்­பது கேள்­விக்­கு­ரியதே. அது­வு­மின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சி­யாக அர­சியல் சாசன முயற்­சிக்­காக கடு­மை­யாக முயற்சி செய்­த­போதும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மையின் கவ­ன­மின்மை கார­ண­மா­கவே அம்­மு­யற்சி தோல்வி கண்­டது என்ற அபிப்­பி­ராயம் தமிழ் மக்கள் மத்­தியில் இருந்து கொண்­டி­ருக்கும் நிலையில், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்­சிக்கு முட்டுக் கொடுக்க தமிழ்த்­த­லை­மைகள் முன்­வ­ர­மு­டி­யுமா? மறு­பக்கம் ஏப்ரல் தாக்­குதல் கார­ண­மாக நொந்து நொடிந்து போன முஸ்லிம் மக்­களை இக்­கட்சி கைவிட்டு விட்­டது என்ற அபிப்­பி­ராயம் முஸ்லிம் மக்கள் மத்­தியில் வேரூன்றிக் காணப்­ப­டு­கின்ற நிலையில் எதிர்­கா­லத்தில் உடன்­பட்­டுப்­போக வாய்ப்­புண்டா என்­பது முஸ்லிம் மக்கள் பக்­க­மாக நின்று பார்க்­கப்­பட வேண்­டிய விடயம்.

எவை எவ்­வாறிருப்­பினும், இன்­றைய அர­சாங்கம் தான் எதிர்­பார்க்கும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை அதிஷ்­ட­வ­ச­மாகப் பெற்­றுக்­கொள்­ளு­மாக இருந்தால் அதனால் எதிர்­கா­லத்தில் சிறு­பான்மை சமூகம் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பாரிய சவால்கள் தொடர்பில் எண்­ணிப்­ ­பார்க்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. தமிழ்த் தலை­மை­களைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விவ­கா­ரங்கள் பற்­றியோ 13 ஆவது திருத்­தத்தை பலப்­ப­டுத்­து­வது தொடர்­பிலோ மூச்சு விட முடி­யாத அபத்­த­மான சூழ்­நி­லை­யொன்று உரு­வா­கு­மென்­பதை இன்­றைய போக்­கி­லி­ருந்தே கற்­றுக்­கொள்ள முடியும்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்து நூறு நாட்­களை தாண்­டி­விட்டபோதும் தமிழ்த் தரப்­பி­னரை அழைத்து ஜனாதிபதி பேசுவார் என அவர்கள் வழிமேல் விழி­வைத்து காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­போதும் அந்த எதிர்­பார்ப்பு இம்­மி­ய­ளவும் சாத­க­மான வாய்ப்பைக் கொண்­டு­வ­ர­வில்லை. அண்மையில் இந்­தி­யா­வுக்கு சென்று வந்த ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் கருத்து தெரி­விப்­புகள் எவ்­வ­ளவு கடுமை யானது என்­பதை தமிழ்த் ­த­லை­மைகள் அறி­யா­ததல்ல.  இதே­வேளை, மாகாண சபை முறைகளை பலப்­ப­டுத்­து­வதன் மூலம் அதி­காரப் பகிர்வை அர்த்­த­முள்­ள­தாக்­கு­வோ­மென மேற்­படி இரு­வரும் தமது கருத்­தாக தெரி­வித்­தாலும், இன்றைய     ஆட்­சியில் மாகாண சபை முறைக்கு ஆப்பு வைக்­கப்­ப­டுமா என்ற பயப்­பாடு தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளது. அது­வு­மன்றி, கடந்த நான்கு வரு­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாழாக்­கி­விட்­டது. அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்குக் கூட தீர்வைத் தேடித்­த­ர­வில்­லை­யென்ற ஆழ­மான கோபங்கள் இப்­பொ­ழுதும் இருந்து கொண்டு தான் இருக்­கி­ன்றன.

முஸ்லிம் தலை­மை­களைப் பொறுத்­த­வரை அவர்கள் இன்று திரி­சங்கு நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றார்கள். அங்கும் செல்ல முடி­யாமல் இருக்கும் சேர­முடி­யாமல் தளம்பிக் கொண்­டி­ருக்கும் நிலையில் தான் எதிர்­வரும் பொதுத் தேர்­தலை எதிர்­கொள்ளப் போகி­றார்கள். ஒரு காலத்தில் எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும் அவற்­றுடன் சேர்ந்து தகு­தி­யான பத­வி­களை அமைச்­சுக்­களைப் பெற்­றுக்­கொண்டு தமது சமூ­கத்­துக்கு அளப்­பரிய சேவை­களை செய்து வந்­துள்­ளனர். இந்த விட­யத்தில் தமிழ்த் தலை­மைகள் கவனம் காட்­ட­வில்லை என்­பது தமிழ் மக்களி பெரும்  கவலையாகவும் இருந்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்வரும் தேர்தலின் பின் மீண்டுமொரு வாய்ப்பும் வசதியும் வரமுடியுமா என்ற கவலை முஸ்லிம் சமூகத்திடம் இல்லாமலில்லை. காரணம் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டு சொல்வது போல் இன்றைய அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை ஓரம் கட்ட நினைப்பது மாத்திரமன்றி நிர்மூலமாக்க நினைக்கிறதென்பதற்கு பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு தொடர்பாக சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் பிரிந்து நிற்க வேண்டும். தமது வாக்குகளை இரு பக்கமும் பிரித்து வழங்க வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது என தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தை எச்சரித்திருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எவ்வாறிருப்பினும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்வரும் பொதுத் தேர்தலானது சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரை பாரிய சவாலும் போராட்டமும் கொண்டது என்பதை மறுத்துக் கூறமுடியாது.   இவ்வாறானதொரு அபத்தமான சூழ்நிலையில் சிறுபான்மைத் தரப்பினர் சிந்தித்து தூரநோக்குடன் செயற்பட வேண்டியது அவசியமானது. தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டு தீர்மானத்துக்கு வரவேண்டுமென ஒரு சாரார் அழுத்தம் கொடுத்துவருகிறார்கள். அதேபோன்றே முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஒன்றுகூட வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்த் தரப்பினரைப் பொறுத்தவரை அம்முயற்சி ஆகாய தாமரையாகவே இருக்கப் போகிறது. காரணம் நாளுக்கு நாள் புதிய புதிய கட்சிகளின் தோற்றம், அமைப்புகளின் உருவாக்கம் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான கோரிக்கையையும் தத்துவத்தையும் துரத்திக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து மீட்சி பெறுவது என்பது இந்த நூற்றாண்டில் மாத்திரமல்ல எத்தனை நூற்றாண்டு சென்றாலும் ஆகப்போகிற காரியமில்லை. ஆனால், எதிர்கால சிறுபான்மை மக்களின் நலன்கருதி பலமுள்ள ஓர் ஒற்றுமையும் கூட்டும் உருவாக வேண்டுமென்பதை சிறுபான்மையினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

திரு­மலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43