பா­கிஸ்­தானிடம் இலங்கை விமா­னங்­களை கொள்­வ­னவுசெய்தால் விளை­வுகள் மோச­மாகும் 

07 Dec, 2015 | 09:06 AM
image

 

பா­கிஸ்­தானிடம் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு இலங்கை தீர்­மானிக்­கு­மானால் அது மோசமான விளை­வு­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும் என இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எச்­ச­ரித்­துள்ளார்.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பாக்­கிஸ்­தானின் ஜே.எவ். போர்­ வி­மா­னங்கள் பத்­தினை கொள்­வ­னவு செய்­வது தொடர்­பாக இலங்கை விமா­னப்­ப­டைக்கும் பாக்­கிஸ்­தானின் விமா­னப்­ப­டைக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள இணக்­கப்­பாடு குறித்து இந்­தியா கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­தாக முக்­கிய இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.

முன்னாள் விமா­னப்­படை தள­பதி ஜய­லத்­வீ­ரக்­கொடி பாக்­கிஸ்­தானின் தூது­வ­ராக பணி­யாற்­றிய காலப்­ப­கு­தியில் இந்த இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் கூட்­டுத்­த­யா­ரிப்­பான இந்த வகை­வி­மா­னங்கள் வான்­வெளி கண்­கா­ணிப்பு மற்றும் தாக்­குதல், விமா­னங்­களை இடை­ம­றித்தல் போன்­ற­வற்றை சிறப்­பாக மேற்­கொள்­ள­கூ­டி­யவை.

இதே­வேளை இந்த உடன்­ப­டிக்கை குறித்து இந்­திய தேசி­ய­பா­து­காப்பு ஆலோ­ச­கர்­அஜித் டோவல் இந்­தி­யாவின் கரி­ச­னை­யை பிர­த­ம­ருக்கு .ஜனா­தி­ப­திக்கும் நேர­டி­யாக தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இலங்கை ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை நேர­டி­யாக தொலை­பே­சியில் தொடா­பு­கொண்ட அவர் இந்த விடயம் குறித்த இந்­தி­யாவின் அதி­ருப்­தியை வெளிப்­ப­டை­யாக தெரி­வித்­துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாக்­கிஸ்­தானின் விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு இலங்கை தீர்­மா­னிக்­கு­மானால் அது மோச­மான விளை­வு­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்கும் என இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எச்­ச­ரித்­துள்ளார்.

இதே­வேளை இலங்கை இந்­தி­யா­வி­ட­மி­ருந்து மூன்று கடற்­படை கப்­பல்­களை வாங்­கு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்­ளது எனினும் இதனை நிரா­க­ரித்­துள்ள இந்­தியா போர்­வி­மா­னங்கள் குறித்த தனது உறு­தி­யான நிலைப்­பாட்டை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இதன் பின்னர் இலங்கை பாது­காப்பு அமைச்சு இந்­தி­யா­வி­ட­மி­ருந்து அதே ரக ­வி­மா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு அல்­லது வேறு விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய தயார் என அறி­வித்­தள்­ளது.

எனினும் இது குறித்து தெளி­வான பதிலை அளிக்­காத இந்­தியா விமா­னங்­களை கொள்­வ­ன­வு­செய்­வ­தற்­கான கட­னு­த­வியை வழங்க தான் தயார் எனவும் எனினும் இலங்கை பாக்கிஸ்தானை தவிரவேறு எந்த நாட்டிலிருந்தும் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பாக்கிஸ்தான் பிரதமர் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்போது விமானக்கொள்வனவு குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46