இத்தாலியிலிருந்து வந்த இலங்கையர் இருவர், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டதான சந்தேகத்துடன் அங்கொட தொற்றுநோய் பிரிவு IDH வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய சம்பந்தப்பட்ட 2 நபர்களுக்கும் வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியன நோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டு அந்த இருவரும் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், IDH வைத்தியசாலைக்கு ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள் மீண்டும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம மேலும் தெரிவித்தார்.
அத்தோடு இது தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM