கொரோனாவில் பிரிட்டன் பிரஜையொருவர் உயிரிழப்பு!

Published By: Vishnu

28 Feb, 2020 | 07:32 PM
image

யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளான பிரிட்டன் நாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நபர் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இறந்த ஆறாவது பயணி என்று ஜப்பானிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கோவிட் -19 என்றும் அழைக்கப்படும் கொரோனா வைரஸால் இறந்த முதல் பிரிட்டன் இவராவார். தற்போது பிரிட்டனில் 19 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த நால்வருக்கு கொரோன தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேவ‍ேளை கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளாகாத பலர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர்.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 700 க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் குழுவினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit - Theguardian

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10