(ஆர்.விதுஷா)
இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில்,
ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாக கூறி கடந்த அரசாங்கம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மீண்டுமொரு அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இந்த அரசாங்கம் அதற்கான தீர்வினைப்பெற்றுத்தருவதாக கூறியிருந்த போதிலும் எந்த தீர்மானத்தையும் பெற்றுத்தரவில்லை.
ஆகவே இடைக்கால கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்டஏழு அம்ச கோரிக்கைளை கல்வி அமைச்சில் கையளித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியினை கேட்டிருந்தோம்.
இருப்பினும் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது எமக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கம் தகுந்த தீர்மானத்தை பெற்றுத்தர தவறும் பட்சத்தில் மார்ச் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து தொடர் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM