பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹரி தன்னை “ ஹரி ” என்றே அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர்.
பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தில் இருந்து விலகியதை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அவர்கள் இருவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் 'ரோயல்' என்னும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், தன்னை அரச குடும்ப அடைமொழியோடு ரோயல் ஹரி என்று அழைக்காதீர்கள், ஹரி என்றே அழையுங்கள் என வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM