விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை இருந்ததாலேயே நாம் இந்த இடத்தில் நிற்கின்றோம். இனியாவது நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும். எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பிரான்ஸை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்தார்.
ஜெனிவாவில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான காட்சிப்படுத்தல்களை நடத்தி வருகின்ற அவரிடம் அதன் நோக்கம் மற்றும் விளைவுகள் என்பன தொடர்பில் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவருடனான குறுகிய செவ்வி வருமாறு:
கேள்வி: ஜெனிவா பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் எட்டாவது வருடமாக இந்த கண்காட்சியை நடத்துகின்றீர்கள். இதனால் என்ன பலன் கிடைத்திருக்கின்றது?
பதில்: ஆயுதப் போராட்டத்தில் விரைவாக எதனையும் அடைந்து விடலாம். ஆனால் அரசியல் ஜனநாயக போராட்டமானது காலம்கடந்துதான் பலன்தரும். இவ்வாறு காலம்கடந்து பல நாடுகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் எங்களுக்கும் நீதி கிடைக்கும் என நம்பி தொடர்ச்சியாக இங்கு இந்த விடயங்களை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இது மனித உரிமை மீறல்கள் அல்ல. அப்படி மனித உரிமை மீறலாக இருந்திருந்தால் அதனை இலங்கையிலேயே தீர்த்திருக்கலாம். இதுவொரு இனப் படுகொலையாகும். இது ஒரு நீதிகோரும் பிரச்சினையாகும். அதற்காகவே நாம் நீதிகோரிக் கொண்டிருக்கின்றோம். அதனால் தான் இம்முறையும் இந்த கண்காட்சியை செய்கின்றோம்.
கேள்வி: சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் கோருகின்றன. அத்துடன் இலங்கையானது 30/1 பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகுகின்றது. இந்த சூழலில் இவ்வாறான காட்சிப்படுத்தல்கள் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: இதேகேள்வியை 2015ஆம் ஆண்டு ஜெனிவா பேரவையில் நாம் கோரினோம். இந்த விடயத்தை சர்வதேசம் கையாளவேண்டும் என்று கோரினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகோரும் சபையாகவே ஐ.நா. மனித உரிமை பேரவை இருக்கிறது. இலங்கை இதிலிருந்து வெளியேறிக்கொண்டாலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஒரு கடமை இருக்கிறது. அந்த பேரவை அந்தக்கடமையை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். நாங்கள் யாரையும் நம்பத் தயாரில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் எமக்கு உதவி செய்யவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை விடயத்தில் ஒற்றுமையை காண முடியவில்லையே?
பதில்: விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை இருந்ததாலேயே நாம் இந்த இடத்தில் நிற்கின்றோம். இனியாவது நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும். எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டு நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். இதனை நான் வலியுறுத்துகிறேன். இலங்கையில் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் தொடர்பில் முடிவெடுக்கும்போது ஒற்றுமையாக இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் இதிலிருந்து விலகுவதை வரவேற்பதாக சஜித் பிரேமதாசவும் கூறியிருக்கிறார். இலங்கை பெரும்பான்மை மக்கள் தமது உரிமை விடயத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். எனவே நாமும் எல்லோரும் ஒற்றுமையாக நின்றால் நிச்சயமாக நீதியைப் பெறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM