“இலங்கை கலப்பு விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­கா­விடின் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு செல்­ல­வேண்­டி­வரும்”

Published By: J.G.Stephan

27 Feb, 2020 | 02:46 PM
image

புலம்­பெயர் அமைப்­பு­க­ளாகிய நாங்கள் பல ஆண்­டு­க­ளாக இலங்­கையை கண்­கா­ணித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் எம்­மை­ப் பொ­றுத்­த­வ­ரையில்  இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­வது இல்­லா­விட்டால் இலங்­கைக்­கான விசேட தீர்ப்­பா­ய­மொன்றை உரு­வாக்­குதல், சர்­வ­தே­சத்தின் ஊடாக பொறுப்புக் கூறலை வலி­யு­றுத்தல் போன்ற விட­யங்­களை மேற்­கொள்ள வேண்டு­மென்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம் என்று   அனைத்­து­லக ஈழத்­த­மிழர் பேர­வையின் பொது­மக்கள் தொடர்­ப­தி­காரி திருச்சோதி தெரி­வித்தார்.

ஜெனிவா வளா­கத்தில் வீரகேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். நேர்­காணல் வரு­மாறு:      

கேள்வி: ஐ.நா. மனித உரிமை பேர­வையின் தீர்­மா­னத்­துக்­கான இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளமை எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என உங்கள் அமைப்பு கரு­து­கி­றது?

பதில்: இலங்கை அரசு 2015இலி­ருந்து இணைந்த ஒரு பிரே­ர­ணையை கைச்­சாத்­திட்­டது. இந்த கைச்­சாத்­தி­லி­ருந்து ஒரு­த­லை­பட்­ச­மாக வில­கு­வ­தென்­பது எந்த பக்­கத்தில் நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மென்ற ஒரு கேள்வி இருக்­கின்­றது. காரணம் இந்த பிரே­ரணை இலங்கை மட்டும் செய்­ய­வில்லை. இதன் பங்­கு­தா­ரர்­க­ளாக  ஐக்கிய நாடுகள் சபையின் அங்­கத்துவ நாடுகள் இணைந்து மேற்­கொண்ட ஒரு கூட்டு ஒப்­பந்­த­மாகும். இதி­லி­ருந்து எப்­படி, எவ்­வாறு ஒரு­தலைபட்­ச­மாக வில­கு­வது என்பது குறித்து இலங்கை அறி­விப்­பது கேள்விக்குறியே. அதி­லி­ருந்து எழும் பிரச்­சி­னை­க­ளையும் கேள்­வி­க­ளையும் இவர்கள் எதிர்­கொள்ள தயா­ராக இருக்­கின்­றார்­களா என்­பதும் கேள்விக்குறியே.

கேள்வி:  ஆனால்  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கிக்­கொள்­வ­தாக  இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன அறி­வித்­துள்ளார்.  இந்த முடிவின் தாக்கம் குறித்து பேச்சு­வார்த்தை நடத்த உங்­க­ளது தரப்­பி­லி­ருந்து ஏதேனும் முயற்சி  முன்­னெ­டுக்­கப்­பட்­டதா?

 பதில்:  இந்த அறி­விப்பு வருவ­தற்கு முன்­ப­தா­கவே கடந்த 12ஆம் திக­தி­யி­லி­ருந்து பல்­வேறு நாடு­களை சென்று சந்­தித்து வரு­கின்றோம். சென்ற வாரம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் சந்­திப்பை மேற்­கொண்டோம். எல்லா நாடு­களும் இந்த விட­யத்தில் மிக அவ­தா­ன­மாக இருக்­கின்­றன.  தாம் முன்­வைத்த பொறுப்பு கூற­லி­லி­ருந்து பின்­வாங்­கப்­போ­வ­தில்லை எனவும் தெரி­வித்­துள்­ளன. சிறப்பு வரி­ச்ச­லு­கை­யான ஜீ.எஸ்.பி பிளஸ் போன்ற அதி­கா­ரி­களும் கூட இலங்­கையில் இடம்­பெறும் ஒவ்­வொரு விட­யங்­க­ளையும் தாம் கண்­கா­ணித்து வரு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இந்த  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை வில­கு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­தையும் உறு­தி­பட கூறி­யுள்­ளன.

கேள்வி:  இலங்கை தனது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்ள நிலையில் இது தொடர்பில் சர்­வ­தேச நாடு­களின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை எவ்வா­றா­ன­தாக அமையும்?

பதில்:    இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை எளிதில் இதனை விட்டு வெளி­யேற முடி­யாது. இதனை  ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது என சர்­வ­தேச நாடுகள் உறு­தி­பட அறி­வித்­துள்ளன. காரணம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு இணைந்து எடுக்­கப்­பட்ட ஒப்­பந்தம். அவ்­வாறு வில­கு­வ­தாயின் மாற்று தீர்வு குறித்த பிரே­ர­ணையை இலங்கை முன்­வைக்க வேண்டும். அந்த மாற்று பிரே­ர­ணையை முன்­வைக்­கும்­போது அதன் பின்­வி­ளைவு எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்கும் என்­பது குறித்து பின்னர் சிந்­திப்­ப­தாக தெரி­வித்­துள்­ளன.

  இலங்கை நிச்­சயம் பதில் சொல்­லி­யாக வேண்டும். அந்த பொறுப்­பு­க்கூறல் இல்­லாத பட்­சத்தில் மக்­க­ளுக்கு  தீர்­வொன்றை பெற்றுக் கொடுக்க முடி­யாது என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றன.

கேள்வி: யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் ஐ.நா.வில் பல ஆண்­டு­க­ளாக இந்த விவ­காரம் இழு­பறி நிலையில் இருந்து வரு­கின்ற நிலையில், இந்த விவ­கா­ரத்தை சர்வதேச    குற்ற­வியல் நீதி­மன்­றுக்கு கொண்டு செல்ல வேண்­டு­மென ஒரு­த­ரப்பும் வேண்­டா­மென இன்­னொரு தரப்பும் கூறி­வ­ரு­கின்­றன. இது குறித்து உங்கள் அமைப்பின் கருத்து என்ன?

 பதில்: சர்­வ­தேச நாடு­களின் ஆத­ரவு கிடைக்­கும்­பட்­சத்தில் நிச்­சயம் பாது­காப்பு சபைக்கு கொண்டு செல்ல முடியும். மனித உரிமை சபையில்  மட்டும்  தீர்­வுக்­காக நிற்­காமல் அதற்கு அப்பால் செல்ல வேண்டும். அதற்­கான செயற்­பா­டு­களை நாம் தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம். மனித உரிமை சபை மாத்­திரம் எமக்கு தீர்­வல்ல.  இத­னா­லேயே நாம் மனித உரிமை சபை­யோடு நின்­று­விடக் கூடாது என்­பதில் தெளி­வாக உள்ளோம். நாம் தொடர்ந்தும் இலங்­கையை கண்­கா­ணித்து வரு­கின்றோம். மனித உரிமை சபையில் இலங்கை பிரச்­சினை தொடர்ந்தும் இருக்க வேண்­டு­மென்­பது எமது வேண்டுகோள். இது இருந்­தால்தான் இலங்­கையை தொடர்ந்தும் எமது கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருக்க முடியும். எமது மக்­களை பாது­காக்க முடியும்.

கேள்வி:  இந்த பிரே­ர­ணை­யி­லி­ருந்து இலங்கை அரசு வில­கி­னாலும் எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் சில­வே­ளை­களில் மாற்று தீர்­மா­ன­மொன்றை முன்­வைக்­கலாம் என்ற கருத்­து­ நி­லவி வரு­கின்ற நிலையில் அவ்­வா­றான தீர்­வொன்றை  முன்­வைக்­காத சம­யத்தில் மார்ச் மாதம் ஐ.நா எவ்­வா­றான அழுத்­தங்­களை கொடுக்கும்?

  பதில்: இலங்கை மாற்று தீர்­வொன்றை முன்­வைக்­காத பட்­சத்தில்  இன்­றி­லி­ருந்து (நேற்று)  மார்ச் 29 வரை என்­ன­மா­தி­ரி­யான நிலைப்­பாட்டை எடுக்கும் என்­பதை கண்­கா­ணித்து கொண்­டுதான் ஐக்­கிய நாடுகள்  சபையில் பொதுச் செய­லாளர் முன்­வைக்கும் பிரே­ரணை அமை­யலாம். ஆனால் எதுவும் செய்­யாத பட்­சத்தில் ஐ.நா உயர்ஸ்­தா­னிகர் அல்­லது அவரை சார்ந்த அமைப்­புகள் ஏதேனும் பரிந்­து­ரை­களை முன்­வைக்­கலாம். இலங்கை அர­சுக்கு கூறி­ய­துபோல் கலப்பு விசா­ர­ணைக்­கு­ழுவை அமைக்­காத பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையை நோக்­கி செல்ல வேண்டி வரலாம். அது இலங்­கையின் செயற்­பா­டு­களை கொண்டே அமையும். புலம்­பெயர் அமைப்­பு­க­ளா­கிய நாங்கள் பல ஆண்­டு­க­ளாக இலங்­கையை கண்­கா­ணித்து வரு­கின்றோம். அந்த அடிப்­ப­டையில் எம்­மைப் பொ­றுத்­த ­வ­ரையில்  இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்­வது இல்­லா­விட்டால் இலங்­கைக்­கான விசேட தீர்ப்­பா­ய­மொன்றை உரு­வாக்­குதல், சர்­வ­தே­சத்தின் ஊடாக பொறுப்புக் கூறலை வலி­யு­றுத்தல் போன்ற விட­யங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றோம். நாம் சந்­தித்த அனைத்து நாடு­களும் கூட இலங்கைக்கு பொறுப்பு கூறல் இல்லாமல் எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாது என கூறியுள்ளன.

கேள்வி: புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் காணப்படும் ஒற்றுமை யில்லாத தன்மையை நிவர்த்தி செய்ய முடியாதா?

பதில்: ஒற்றுமை இல்லையென கூறிவிட முடியாது. ஒவ் வொரு அமைப்பினரும் ஒரு வழிப்பாதை யூடாக பயணிக்கின்றனர். அதே நேரம் நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் ஒரே சிந்தனை யுடன் பயணிக்கின்றோம். இருப்பி னும் எம்மிடையே காணப்படும் மாற்று சிந்தனைகளை  ஒன்றி ணைத்து கொண்டு பயணிக்க தேவையான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13