(இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கும், இறையான்மைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.
மக்களாணைக்கு மதிப்பளிக்கும் விதமாகவே பிரேரணையில் இருந்து விலக தீர்மானித்துள்ளோம். இது பாரிய வெற்றியாகும். சர்வதேசத்தினுடனான நல்லுறவை அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லும். என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இணை நாடுகளுடன் 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டு வந்த பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை தேசதுரோக செயற்பாடாகவே கருத முடியும்.
பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இலங்கை அரசியலமைப்பிற்கும், இறையாண்மைக்கும் முற்றிலும் முரணானதாகும். பல விடயங்கள் சாதாரணமாகவே புறக்கணிக்கும் அளவிற்கு முரண்பாடான தன்மைகளை மாத்திரமே கொண்டிருந்தன.
ஒரு சில பரிந்துரைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் காணப்பட்டன. இவை கடந்த காலங்களில் பலதரப்பட்ட விதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தின.
இலங்கையின் உள்ளக விவகாரங்களின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான பரிந்துரைகளாக பொலிஸ் மற்றும் இராணுவ சேவை மீள் திருத்தம்.
காணி விடுவிப்பு, அதிகார பகிர்வு,பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை திருத்தம், குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கல். உள்ளிட்ட 20 பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டன.
நாட்டின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான அனுமதியை நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கியது. மனித உரிமை பேரவை நடுநிலையாக செயற்படும் அமைப்பாக காணப்பபடவில்லை. 2017ம் ஆண்டு அமெரிக்கா மனித உரிமை பேரவையினை கடுமையாக விமர்சித்து பேரவையில் இருந்து விலகியமை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சுயாதீனத்தன்மை தொடர்பான தன்மையினை வெளிப்படுத்தியது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM