தீவகப் பகுதியில் உள்ள 3 பிரதேச செயலகங்களை இணைத்து மூன்று பிரதேசங்களுக்குமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதனுக்கு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனால் வேலணை பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.வேலணை பிரதேச செயலகத்தில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற அங்கஜன் ராமநாதனை பிரதேச செயலகத்தின் வாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் வழி மறித்தனர்.இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM