இன மத வேறு பாடின்றி நாம் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம் என மன்னார் கரிற்றாஸ் வாழ்வோதைய இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
உலகையே அச்சத்திற்குள்ளாகும் கொரோனோ வைரஸினால் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களுக்கான இரங்கல் வழிபாடு மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய மண்டபத்தில் அதன் இயக்குநர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய காலத்தில் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் விடயம் கொரோனா வைரஸ். இதன் தாக்கம் படிப்படியாகப் பல நாடுகளில் பரவி வருகின்றது.
குறிப்பாகச் சீனாவிற்கு அடுத்தாக இத்தாலி, தென்கொரியா போன்ற நாடும் பாதிக்கப்படுவதாகச் செய்திகளில் அறிகின்றோம்.
எனவே இன மத வேறுபாடின்றி நாம் பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் மனித நேயத்தோடு நாம் வழிபடும் கடவுளிடம் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆன்மாக்களுக்காகவும், இவர்களை இழந்து துயரப்படும் மக்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.
இவை மட்டுமல்லாது இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்கு இரவு பகல் பாராது பாடுபடும் வைத்திய நிபுணர்களுக்கு இறைவன் நல்லதொரு வழிகாட்டியாகச் செயற்படுவதற்கும், அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வது காலத்தின் தேவை என்பதைவிட இதுவே மனித மாண்பை மதிக்கும் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் போது கறிற்ராஸ்-வாழ்வுதய பணியாளர்கள் மற்றும் வாழ்வுதயத்தில் கணினி பயிற்சியினை பெறும் மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM