வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள் - சிவமோகன்

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 09:36 PM
image

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே இது அந்த குற்றப்பத்திரிகைகளை மூடி வைக்கும் செயற்பாடாக உள்ளதாக கருதப்படுகிறது. என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.

அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தானே நியமித்த நீதிபதியின் முன் அவரே சென்று  சாட்சியம் வழங்கி அவரே தீர்ப்பு வழங்க முற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிபதிகளுக்கு முன்  நிறுத்தப்பட வேண்டும். தான் தமிழ் மக்களின் எதிர் பார்ப்பு இந்த விடயத்தில் கூட ஐ.நா சபை உறுப்படியாக நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

 எனவே இனி எதிர்வரும் காலங்களிலாவது  இலங்கை அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 30.140.1 தீர்மாணங்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்ட பின்னராவது  சரியான ஒரு நடவடிக்கையை எடுக்க ஐ.நா முயற்சிக்க வேண்டும்.

மேலும் உள்ளுர் விசாரணை என்பது எப்படி அமையும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக அமையும். குற்றவாளிகளும் அவர்களே நீதிபதிகளும் அவர்களே என்ற ரீதியில் இருக்கும் இந்த அரசிடம் இருந்து ஒரு துளி நியாயத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம் பெற்ற தாக்குதலுக்கான  சூத்திரதாரிகளை இன்னும் கண்டு பிடிக்கவில்லை.   அவை பற்றிய ஒழுங்கான அறிக்கை தயாரிக்கப்படவில்லை  காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு விட்டது.

மன்னார் மனிதப் புதை குழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் ஒழுங்காக பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.   அந்த எலும்புக் கூடுகள் யாருடையது, எந்த காலத்துக்கு உரியது என்ற நம்பகமான அறிக்கையை வெளியிட இந்த அரசு தயங்குகிறது.

 வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.   யுத்த காலத்தில் இராணுவப் பாதுகாப்பு எப்படி இருந்ததோ  அவ்வாறே அனைத்துப்பகுதிகளிலும் உள்ளது.

  ஜனாதிபதி தேர்தலில் தனக்கு தமிழ் மக்கள் வாக்கவில்லை  என்று தமிழ் மக்களை பழிவாங்குகிறாரா? இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் தமிழ் மக்களை அடி பணிய வைத்து விடலாம் என்று ஜனாதிபதி கணவு காண்கிறாரா?  இவ்வாறான அடக்கு முறைகளை நேரடியாக கண்காணிப்பதற்கு ஐ.நா  அலுவலகம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்து பகுதிகளில் திறக்கப்பட வேண்டும் .

அப்போது தான் தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வுரிமை உரிதிப்படுத்தப்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57