லண்டனில் இயங்கும் அமெரிக்க நிறுவனம் கொரோனா அச்சம் காரணமாக 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது

26 Feb, 2020 | 05:40 PM
image

லண்டனில் இயங்கி வரும் அமெரிக்க எண்ணெய் நிறுவனமொன்றில் கொரோனா தொற்று தொடர்பான அச்சத்தை அடுத்து அங்கு பணி புரியும் சுமார் 300 ஊழியர்களை குறித்த  நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியுள்ளதுடன், நிறுவனத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடொன்றுக்கு சென்ற அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் மீண்டும் லண்டனுக்கு திரும்பிய நிலையில், அண்மையில் குறித்த தொழிற்சாலைக்கு பணிக்காக சென்றுள்ளதையடுத்து அவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த ஊழியரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந் நிலையில் அவரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரையில் குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள், வர்த்தகர்கள், கீழ்நிலை ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட சுமார் 300 பேரை நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியுள்ளதுடன், வீட்டிலிருந்தே தொழில்புரியுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை மேற்கண்ட நிறுவனமானது சர்வதேச மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி நிலைமையை கண்காணித்து வருவதாகவும், ஆபத்துகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59