கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கஞ்சா மீட்பு -மூவர் கைது

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 05:18 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று  6 கிலோ கிராம்  கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் அடிப்படையில்  பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி  தலைமையிலான பொலிஸ் அணியினர் சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம்  அவர்களை அழைத்து சென்று  சுண்டிக்குளம் கடற்கரைபகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன்  அவர்கள் மூவரையும்  கைதுசெய்துள்ளதுடன்   அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை  புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த கஞ்சாவின் பெறுமதி எட்டு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 41,39,26 வயதுடைய  குடும்பஸ்தர்கள் என்றும் குற்றவாளிகளை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08