முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் இன்று 6 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அடிப்படையில் அவருடைய பணிப்பின் அடிப்படையில் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் அணியினர் சுதந்திரபுரம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் மூவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அவர்களை அழைத்து சென்று சுண்டிக்குளம் கடற்கரைபகுதியில் மண்ணினுள் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் அவர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன் அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் இரண்டினையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து குறித்த சம்பவம் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த கஞ்சாவின் பெறுமதி எட்டு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் வரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபர்கள் வவுனியாவினை சேர்ந்த 41,39,26 வயதுடைய குடும்பஸ்தர்கள் என்றும் குற்றவாளிகளை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM