பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் பிரதமர் பதிலளிப்பார்

Published By: Ponmalar

16 Jun, 2016 | 05:31 PM
image

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை மாகாணசபை தீர்மானித்திருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருவாரத்தில் பதில் அளிப்பாரென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மத்திய அரசாங்கத்தினால் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடக்கு விவசாய அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அதனை ஓமந்தையில் அமைக்க கோரிய போதும் மத்திய அரசாங்கம் சில சாட்டுப் போக்குகளைக் கூறி அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில் தற்போது பொருத்தமான இடங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர் அதனை பரிசீலித்து சாதகமான பதிலைத் தருவார் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்