வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை மாகாணசபை தீர்மானித்திருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒருவாரத்தில் பதில் அளிப்பாரென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்திய அரசாங்கத்தினால் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடக்கு விவசாய அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் அதனை ஓமந்தையில் அமைக்க கோரிய போதும் மத்திய அரசாங்கம் சில சாட்டுப் போக்குகளைக் கூறி அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது பொருத்தமான இடங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர் அதனை பரிசீலித்து சாதகமான பதிலைத் தருவார் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM