bestweb

தமிழ் மக்களின் அரசியலில் அடுத்த வருடம் முக்கியமானது

07 Dec, 2015 | 08:46 AM
image

இலங்கை தமிழ் மக்­களின் அர­சியல் சரித்­தி­ரத்தில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு அதி முக்­கி­ய­மான வரு­ட­மாக இருக்­கு­மென நான் நம்­பு­கின்றேன் என்று எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் 60ஆவது ஆண்டு நிறை­வை­யொட்டி மட்டக்­க­ளப்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற சிவ­தொண்டர் மாநாட்டின் ஆறு­முக நாவ­லரின் எழுச்சிக் கருத்­த­ரங்கின் இறுதி வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

மட்­டக்­க­ளப்பு இந்து இளைஞர் பேர­வையின் ஏற்­பாட்டில் கிழக்கு பல்க­லைக்கழக இந்து மாணவர் மன்­றத்தின் ஆத­ர­வுடன் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத் தின் மட்­டக்­க­ளப்பு நாவற்­குடா சுவாமி விபு­லா­னந்தர் அழ­கியற் கற்­கைகள் நிறு­வக மண்­ட­பத்தில் நடை­பெற்ற இந்த வைப­வத்தில் அவர் தொடர்ந்­து உரையாற்றுகையில்; அடுத்த வரு­டத்­திற்குள் இந்த நாட்டில் நீண்­ட­கா­ல­மாக தமிழ் மக்­க­ளுக்கு நடை­பெ­றாத பல விட­யங்கள் நடை­பெற வேண்­டிய ஒரு தேவை இருக்­கின்­றது. நடை­பெற வேண்­டிய நிலைமை தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சினை தற்­போது இந்த நாட்டில் மட்டும் ஏற்றுக் கொண்ட பிரச்­சி­னை­யல்ல. எமது பிரச்­சினை முன்­னெப்­போ­து­மில்­லா­த­ள­வுக்கு சர்­வ­தே­ச­ம­ய­மாக்­கப்­பட்­ட ஒரு பிரச்­சி­னை­யாகும்.

இன்று சர்­வ­தேச சமூகம் பல சர்­வ­தேச நாடுகள் ஐக்­கிய நாடுகள் சபை விசே­ட­மாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இலங்­கை விடயத்தில் உன்னிப்பாக இருக்கின்றன. குறிப்பாக நிரந்­த­ர­மான சமா­தானம் நிரந்­த­ர­மான புரிந்­து­னர்வு நிரந்­த­ர­மான நல்­லி­ணக்கம் உண்­மை­ கண்டறியப்பட்டு தீர்வு வழங்­கப்­படுதல் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் வழங்கப்படுதல் என்பன தொடர்பில் இந்த தரப்புக்கள் அவதானமாக இருக்கின்றன.

மேலும் ஒரு அர­சியல் தீர்வு ஏற்­பட வேண்­டு­மென்­பதில் சர்­வெ­தேச சமூகம் உறு­தி­யாக இருக்­கின்­றது.

ஆகவே இந்த நேரத்தில் நாங்கள் எல்­லோரும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து எங்­க­ளுக்குள் இருக்­கின்ற பிரச்­சி­னை­களை நாங்­களே பேசி தீர்த்துக் கொண்டு கரு­மத்தை முன்­னெ­டுக்க வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும். இந்த உத­வியை அனை­வரும் வழங்க வேண்­டு­மென கேட்டுக்கொள்­கின்றேன்.

1915ஆம் ஆண்டு பெரும்­பான்மை இனத்தை சேர்ந்த சிங்­கள தலை­வர்கள் கைது செய்­யப்­பட்ட போது அவர்­களின் விடு­த­லைக்­காக தமிழ் தலைவர் சேர்பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் ஆற்­றிய பணிகள் மிகவும் மதிக்­கத்தக்கனவாகும்.

ஆறு­முக நாவலர் யாழ்ப்­பா­ணத்தில் நல்­லூரில் பிறந்­தவர். மிகவும் வச­தி­யான ஒரு குடும்­பத்தில் பிறந்­தவர். சமூ­கத்தில் மிகவும் மதிப்பை பெற்ற குடும்­பத்தில் பிறந்­தவர். அவர் கல்­வியில் உயர் கல்­வியில் தேர்ச்சியடைந்தார்.

சைவமும் பாது­காக்­கப்­படல் வேண்டும் என்ற பணியில் மிகவும் தீவி­ர­மாக இவர் செயல் பட்டார்.

சைவ சம­யத்தை பின்­பற்­று­கின்­ற­வர்கள் வேறு மதங்­க­ளுக்கு மாறிச் செல்­வதை தடுக்க வேண்­டு­மென்­பதில் அக்­க­றை­யோடு இருந்தார்.

தெரியாமை கார­ண­மாக அல்­லது அறி­யா­மையின் கார­ண­மாக மக்கள் மத­மாற்­றத்தில் ஈடு­படக் கூடாது. மத மாற்­றத்­திற்கு பலி­யாக கூடாது. மக்கள் மத்­தியில் சென்று சைவத்தின் தக­மை­களை பெரு­மை­களை விளக்க வேண்­டி­யது அத்­தி­வ­சி­ய­மா­னது என்ற கட­மையை மக்­க­ளிடம் செய்­தால்தான் மத­மாற்­றத்தை தடுக்­கலாம் என்­பதை ஆறு­முக நாவலர் உணர்ந்தார். அதன்­படி நடந்தார்.

தமிழ் மொழியை வளர்ப்­பதிம் முன்­னேற்­று­வ­திலும் அவர் பெரும் பங்­காற்­றினார். யாழ்ப்­பா­ணத்தின் கல்வி வளர்ச்­சிக்­காக அவர் பாரிய பங்­க­ளிப்பை செய்தார். அவர் தனக்­காக வாழ வில்லை. அவர் மக்­க­ளுக்கு வாழ்ந்­தவர். மக்கள் மத்­தியில் சைவத்தை வளர்ப்­ப­தற்­கா­கவும் தமிழ் மொழி எழுச்சி பெறு­வ­தற்­கா­கவும் செயற்பட்டார்.

அவை இரண்­டையும் மக்கள் பின் பற்ற வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக பாரிய பணி­யாற்­றினார்.

அவ­ருக்கு எப்­போதும் நன்­றி­யு­டை­ய­வர்­க­ளாக நாம் இருக்க வேண்டும். அதனை நாங்கள் பின் பற்ற வேண்டும்.

சுவாமி விபு­லா­னந்தர் கல்­வியில் தேர்ச்சியடைந்தார்.தமிழ் மொழியின் பேரா­சி­ரி­ய­ராக அன்­னா­மலை பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடமை புரிந்தார். மட்­டக்­க­ளப்பில் பல பாட­சா­லை­களை வளர்ப்­பதில் கடும் முயற்சி எடுத்தார்.சிவா­னந்தா வித்­தி­யா­ய­லயம் அவரால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு பாட­சா­லை­யாகும்.

திரு­கோ­ண­ம­லையில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்துக் கல்­லூ­ரிக்கும் சுவாமி விபு­லா­னந்தர் ஒரு கார­ண­கர்த்­தா­வாக இருந்தார்.

ஆறு­முக நாவலர் யாழ்ப்­பா­ணத்தைச் சோ்ந்தவர். சுவாமி விபு­லா­னந்தர் மட்­டக்­க­ளப்பைச் சோ்ந்தவர். இவர்­களின் படிப்­பி­னை­களை பின் பற்ற வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அத்­தி­யா­வ­சி­ய­மாகும். விசேட­மாக இளை­ஞர்கள் இவர்­களை பின் பற்ற வேண்டும்.

மட்­டக்­கப்பு மாவட்டம் மிகவும் ஒரு முக்­கி­ய­மான மாவட்டம். தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்­கின்ற இரண்­டா­வது மாவட்டம். யாழ்­மாட்­டத்­திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடு­த­லாக வாழ்­வது மட்­டக்­க­ளப்பு மாவட்டத்தில்தான்.

வட மாகணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் பால மாக அமைவது திருகோணமலை மாவட்டமாகும்.

சைவத்துக்கும் தமிழுக்குமிடையில் பிரிக்க முடியாத ஒரு தொடர்பிருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.

சைவம் பாதுகாக்கப்படல் வேண்டுமாக இருந்தால் தமிழ் பாதுகாக்கப்படல் வேண்டும். தமிழ் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலைமாற்றுக்காற்றுக்கால...

2025-08-14 07:57:48
news-image

இன்றைய வானிலை

2025-08-14 06:15:56
news-image

கடிதம் தந்தால் ஹர்த்தால் தொடர்பில் தீர்மானிப்போம்...

2025-08-14 02:14:17
news-image

மன்னார் காற்றாலைத் திட்டம் ஒருமாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படுகிறது;...

2025-08-14 02:05:36
news-image

‘சுப்ரிம் செட்’ செய்மதி குறித்த உண்மையை...

2025-08-14 01:56:28
news-image

பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி...

2025-08-13 16:14:55
news-image

அருண ஜயசேகர பிரதி பாதுகாப்பு அமைச்சராக...

2025-08-13 21:28:09
news-image

ஹங்வெல்லவில் துப்பாக்கிச் சூடு!

2025-08-13 22:33:33
news-image

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தாமல்...

2025-08-13 16:44:41
news-image

நிலைத்தன்மையான மீன்பிடிக்காக WTO மீன்பிடி மானிய...

2025-08-13 21:36:20
news-image

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா...

2025-08-13 17:08:01
news-image

பிள்ளைகளின் முன்னிலையில் தந்தையை நோக்கி துப்பாக்கிச்...

2025-08-13 20:41:29