உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைதான ஒரு பெண் உட்பட இருவர் பிணையில் விடுதலை

Published By: Digital Desk 4

25 Feb, 2020 | 08:37 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 59 பேரின் விளக்க மறியல்  எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(25)ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட 64 பேரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 03 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 61 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எஞ்சிய  61 பேரில் இன்று(25) இடம்பெற்ற விசாரணையின் பின்னர்  ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய 59 பேரினதும் விளக்க மறியல்   எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி வரை   நீடிக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேக நபர்களும் இரண்டு பேர் சரீரப்பிணையிலும் 25000ருபா ரொக்கப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த  26.4.2020 அன்று சாய்ந்தமருதில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்த  சஹ்ரான்ன் குழுவோடு தொடர்புடைய ஊடகவியலாளர் என குறிப்பிடப்பட்ட   முகம்மது நியாஸ் என்பவரின் மனைவி என சுட்டிக்காட்டப்பட்டது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டு பேரையும் எதிர் வரும் 28.4.2020 அன்று வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவர்களின் பிணை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேற்குறித்த சந்தேக நபர்கள் யாவரும்   கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான்   குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரகள் எனவும் குறிப்பிடப்படுவதுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுவதுடன் நீதிமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33