தனது 9 வயது மகனுக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த தாய்  ; மட்டக்களப்பில் சம்பவம்

Published By: Digital Desk 4

25 Feb, 2020 | 08:00 PM
image

காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று (25.02.2020) செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 4ம் ஆண்டில் கல்வி கற்கும் குறித்த சிறுவனின் பாடசாலைக்கு இன்று(25.02.2020) செவ்வாய்க்கிழமை காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இப்பாடசாலையில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனுக்கு அச் சிறுவனின் தாய் மின்னழுத்தியினால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்ட போது முததில் மறுத்த தாய் பின்னர் மகனை காண்பித்துள்ளார்.

உடலில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து ஆரம்பக்கட்ட சிகிச்சை மற்றும் விசாரணைகளையடுத்து சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை குர்ஆன் மதரசாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான். இதன் போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராசாவுக்கு செல்லுமாறு வற்புறுத்திய நிலையில்  சிறுவன் அங்கு காணப்பட்ட மின்னழுத்தியை எடுத்து தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னழுத்தியை சூடாக்கி சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். இதனால் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் காணப்படுகின்றான்.

கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு செய்யாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினூடாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33