நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் கண்காட்சியும் கலந்துரையாடலும் "மரபுரிமைகளைத் தேடி 2020", கடந்த 22,23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிராத்தனை மண்டபத்தில் இடம்பெற்றது.
நூலக நிறுவனமானது 15 வருட காலமாக ஈழத்து தமிழ் பேசும் சமூகத்தினை எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தும் பணியில் 84,000 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ளது. குறித்த ஆவணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரிய ஆவணங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டது.
ஒலைச்சுவடிகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நினைவு மலர்கள் ஆகிய அச்சிடப்பட்ட ஆவணங்கள் காட்சிபடுத்தப்பட்டது. அத்துடன் சுவடிகள் மின்வருடி ஆவணப்படுத்தும் முறைமை, நூலக இணையத்தளங்களை கையாளும் வழிமுறைகள், வாய்மொழி வரலாறு செயற்பாடு, தொழிற்கலைகள் ஆவணப்படுத்தல் ஆகிய வகைகளிலான கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் 22.02.2020 சனிக்கிழமை காலை ஆரம்பமாகியதுடன், நூலக நிறுவனத்திற்கான ஆவணங்களை வழங்கியோர் கெளரவிக்கப்பட்டனர். தொடர்சியாக மரபுரிமைகளை ஆவணப்படுத்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வுகளும் இரண்டு தினங்களும் இடம்பெற்றது.
ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை கொண்டமைந்த எங்கட புத்தகங்கள் விற்பனை நிலையமும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. குறித்த கண்காட்சி ஒழுங்கமைப்பு பணியினை நூலக நிறுவனத்தினருடன் இணைந்து சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டிருந்தமை சிறப்பானதொரு விடயமாகும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்காட்சியினை ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், ஆவணப்படுத்தலின் அவசியத்தினையும் எடுத்துரைப்பதாகவும் அமைந்தது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM