(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின்போது மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு பதிலளிப்பதற்குத் தயாராகி வருகின்றன.
நாளைய தினம் இலங்கையானது ஜெனிவா பிரேரணையின் அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள விவாதத்தின்போது புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் பதிலளிக்கவுள்ளனர். அதேபோன்று மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இலங்கையின் புதிய நிலைப்பாடு தொடர்பில் பதிலளிக்கவிருக்கின்றனர்.
நாளைய தினம் பேரவையில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன 2015ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற பிரேரணையின் அனுசரணையை விலகிக்கொள்வதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்.
இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பிலேயே மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவிருக்கின்றனர். ஜெனிவா கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பதாக இங்கு வந்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன்போது அரசாங்கம் பிரேரணை அனுசரணையிலிருந்து விலகினால் அடுத்த கட்டமாக என்ன நகர்வுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் உரையாடியிருந்தார்.
அந்த அடிப்படையிலேயே நாளை மறுதினம் நடைபெறவுள்ள விவாதத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பாக உரையாற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM