(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்றைய தினம் ஜெனி வாவில் ஆரம்பமாகிய நிலையில், முதலாவது அமர்வில் உரையாற்றிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்பாக எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை.
உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் விவகா ரம் மற்றும் காலநிலைமாற்ற சவால் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அன்டோனியோ குட்றஸ்ஸும் மிச்செல் பச்லெட்டும் தமது உரைகளில் கூடிய கவனம் செலுத்தியிருந்தனரே தவிர தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் அதிகளவு விடயங்களை முன்வைக்கவில்லை.
நேற்றைய ஆரம்ப அமர்வில் இரண்டாவதாக உரையாற்றிய ஐ.நா. செயலர் அன்டோனியோ குட்றஸ், மனித கடத்தல்கள் அனைத்துப் பிராந்தியங்களிலும் இடம்பெறுவதாகவும், பொதுமக்கள் சர்வதேச சட்ட மீறல்களுக்கு உட்படுவதாகவும் சுட்டிக் காட்டினார். ஐ.நா. செயலர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊடகவியலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதன் காரணமாக கொல்லப்படுகின்றனர். சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பட்டினி நிலைமை அதிகரிப்பதுடன் இஞைர் வேலையின்மையும் உயர்ந்து செல்கின்றது. அத்துடன் குடியியல் மாற்றங்கள், காலநிலை நெருக்கடி என்பன புதிய சவாலாக உருவெடுத்துள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே பதிலே உள்ளது. அது மனித உரிமையாகும்.
மனித உரிமை என்பது அனைத்து பிரஜைகளினதும் பிறப்புரிமையாகும். அவர்கள் அபிவிருத்தியில் உள்வாங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை மூன்றாவதாக உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணைாயளர் மிட்செல் பச்லெட் உரையாற்றுகையில், வருமையையும் சமத்துவமின்மையையும் குறைப்பதற்கு சமூக ஸ்திரத்தன்மை ஊக்குவிக்கப்படவேண்டும்.
மக்களை பின்னடைவுக்கு இட்டுச் செல்கின்றன அநீதியை ஒழிக்கவேண்டும். எனது அலுவலகம் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயராக இருக்கின்றது. அரசாங்கங்களுக்கான எமது தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM