700 பில்லியன் ரூபா வீண் செலவு குறித்து  சஜித்தின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : பந்துல

Published By: R. Kalaichelvan

24 Feb, 2020 | 07:55 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று மாத காலத்திற்குள் 700 பில்லியன் ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது. உண்மையில் அரசாங்கம் அவ்வாறு வீண் செலவு செய்துள்ளதென்றால் அதனை சஜித் பிரேமதாச ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எவ்வித ஆதரங்களும் இன்றி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். நிதி அல்லது பொருளாதார விடயங்கள் பற்றி முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர போன்றிடம் சில தகவல்களைப் பெற்று தனக்கு தோன்றும் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கின்றார்.

அதற்கமையவே கடந்த மூன்று மாத காலத்தில் அரசாங்கம் 700 பில்லியன் வீண் செலவு செய்துள்ளதாகவும், அபிவிருத்தி மற்றும் கடன் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு சட்ட மூலமும் அண்மையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை.

இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பானவர் என்றால் அவர் கூறியவற்றை ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அத்தோடு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு நாளொன்றுக்கான செலவு, மாதமொன்றுக்கான செலவு, மூன்று மாதங்களுக்கான செலவு, 100 நாட்களுக்கான செலவு என்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அரசாங்கத்தை நடத்திச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை.

அந்த காலப்பகுதி வரையான செலவுகள் இடைக்கால கணக்கறிக்கை மூலம் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கு பின்னரான மூன்று மாத காலப்பகுதிக்கான செலவுகளை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் மூலம் கூட்டு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17