மஸ்கெலியா காட்டுப் பகுதிக்கு விஷமிகளால் தீ வைப்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2020 | 04:11 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட 56 ஆவது பிரிவில் உள்ள 20 குடியிருப்பு பகுதியில் இருந்த பற்றை காட்டுக்கு விஷமிகளால் தீ மூட்டபடப்பட்டத்தில் சுமார் 5 ஏக்கர் பற்றை காடு தீக்கிறையாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு காடுகளுக்கு தீ வைப்பதால் வன ஜீவராசிகள் உயிரிழப்பதுடன் நீர் ஊற்றுகள் வற்றிபோக வாய்ப்புள்ளது என்பதுடன் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான செயலை செய்வோரை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகையால் காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை உடன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மஸ்கெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்