கடும்போக்குத் தீர்மானம்

24 Feb, 2020 | 03:45 PM
image

இணை அனு­ச­ரணை வழங்கி சர்­வ­தேச அரங்கில் நிறை­வேற்­றப்­பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையில் இருந்து வில­கு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்தத் தீர்மானத்தை பெப்­ர­வரி மாதம் 26ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குவ­ண­வர்­தன நேர­டி­யாக அறி­விப்பார் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடும்­போக்­கு­டைய அர­சாங்­கத்தின் இந்த நகர்வு, தமிழர் பிரச்­சி­னையில் சர்­வ­தேசம் கொண்­டி­ருக்கின்ற கரி­ச­னையும் அக்­க­றையும் அற்றுப் போகச் செய்­து­வி­டுமோ என்ற அச்­சத்தைத் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதனால் தீர்க்­கப்­ப­டாமல் இழு­ப­றி­பட்டுச் செல்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கும் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்­கான அடுத்த கட்ட நகர்வு கடி­ன­மா­ன­தாக இருக்கப் போகின்­றதே என்ற ஏக்­கமும் மக்கள் மனங்­களில் தலை­யெ­டுத்­துள்­ளது.

ஐ.நா. பிர­ரே­ர­ணைக்கு மைத்­திரி – ரணில் இரட்­டையர் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் கொண்­டி­ருந்த இணை அனு­ச­ர­ணையைக் கைவி­டு­வது, அத்­துடன் இந்தப் பிரே­ர­ணையில் இருந்து வில­கு­வது என்று அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாட்டை பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ அறிக்­கை­யொன்றின் மூலம் அதி­கா­ர­பூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பொது­நிர்­வாக உள்­நாட்டு அலு­வல்கள் ராஜாங்க அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்­கவும், அமைச்சர் என்ற ரீதியில் இதனை உறு­திப்­ப­டுத்தி உள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30/-1 மற்றும் 40-/1 ஆகிய இரண்டு தீர்­மா­னங்­களில் இருந்தும் அரசு விலகிக் கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ளது என்று அவர் கூறி­யுள்ளார்.

ஐ.நா. பிரே­ர­ணையை ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்று 2019 ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மக்­க­ளுக்கு அளித்­தி­ருந்த வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில், அந்தத் தேர்தல் வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­கின்ற கடப்­பாட்டைக் கொண்­டுள்ள அர­சாங்கம் அதனை நிறை­வேற்றும் வகையில் இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது என்று அவர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

இந்தத் தீர்­மானம் குறித்து பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30-/1 தீர்­மா­னத்­திற்கு முன்­னைய அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி அதனை நிறை­வேற்­று­வ­தற்கு ஆத­ர­வ­ளித்­தமை ஒரு வர­லாற்றுத் தவறு என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த வர­லாற்றுத் தவ­றி­னா­லேயே ஏனைய நாடுகள் இலங்­கையின் பாது­காப்புப் படைகள் மீது மனித உரி­மைகள் குறித்த குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­யி­ருக்­கின்­றன என்று அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருந்தார் என்­ப­தற்­காக இலங்­கையின் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்­வாவும், அவ­ரு­டைய குடும்­பத்­தி­னரும் அமெ­ரிக்­கா­வுக்குள் பிர­வே­சிக்க முடி­யாது என்று அமெ­ரிக்கா விதித்­துள்ள தடை உத்­த­ர­வை­ய­டுத்தே, ஐ.நா. பிரே­ர­ணையில் இருந்து வில­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

பொருத்­த­மான நட­வ­டிக்­கையா.....?

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்­றச்­சாட்­டுக்கள் என்­பன நம்­ப­க­மான தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன என்­பது அமெ­ரிக்­காவின் நிலைப்­பா­டாகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அவர் தனது நாட்­டுக்­குள்ளே நுழைய முடி­யாது என அமெ­ரிக்கா தடை­வி­தித்­துள்­ளது.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் குறித்து ஐ.நா. மேற்­கொண்­டி­ருந்த மூவ­ர­டங்­கிய விசா­ர­ணைக்­கு­ழு­வினால் வெளி­யி­டப்­பட்ட தருஸ்மன் அறிக்­கையில் யுத்த மோதல்­களின் போது 58 ஆவது படைப்­பி­ரிவின் கட்­டளைத் தள­ப­தி

­யாக இருந்த சவேந்­திர சில்வா மீது ஆதா­ர­பூர்­வ­மான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவற்றை ஆதா­ர­மாகக் கொண்டே இரா­ணுவத் தள­பதி மீது மனித உரிமை மீறல்கள் மற்றும்  போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்தி அவ­ருக்கு எதி­ராக அமெ­ரிக்கா தடை உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்­ளது. இதனை மிகப் பார­தூ­ர­மான ஒரு விட­ய­மாக அர­சாங்கம் கருதி, அதற்கு மாற்று நட­வ­டிக்­கை­யாக ஐ.நா. பிரே­ர­ணையில் இருந்து வில­கு­வ­தற்­கான முடிவை மேற்­கொண்­டுள்­ளது.

ஒரு நாட்டின் இரா­ணுவத் தள­பதி என்­பது சாதா­ரண பத­வி­யல்ல. அது அர­சியல் ரீதி­யா­கவும், பாது­காப்பு நிலைமை தொடர்­பிலும் அதி உயர்ந்த, அதி கூடிய கௌர­வத்­துக்கும் மரி­யா­தைக்கும் உரி­ய­தொரு பத­வி­யாகும். நாட்டின் உயர் நிலையில் உள்ள அர­சியல் தலை­வர்­க­ளா­கிய ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் எதி­ர்க்­கட்சித் தலைவர் என்ற வரி­சையில் மிக முக்­கி­ய­மான அடுத்த நிலையில் இரா­ணுவத் தள­பதி இடம்­பெ­று­கின்றார்.

அத்­த­கைய பத­வியில் உள்ள ஒரு­வ­ருக்கு எதி­ராக மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தி பிர­யாணத் தடை விதிக்­கப்­ப­டு­வது அந்த நாட்டின் வெளி­வி­வ­கார கௌர­வத்­திற்கு இழுக்­கா­ன­தாகும். அத்­த­கைய  ஒரு நிலை­மை­யா­னது சர்­வ­தேச அரங்கில் அந்த நாட்­டுக்குத் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­து­கின்ற ஒரு விட­ய­மாகும். இந்த நிலையில் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை தொடர்­பான தீர்மானத்தில் இருந்து வில­கு­வ­தற்கு எடுத்­துள்ள முடிவு அர­சியல் ரீதி­யாக உணர்­வு­பூர்­வ­மான ஒரு நிலைப்­பாடு என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனால், மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்டார் எனக் கூறி, இரா­ணுவத் தள­ப­திக்கு அமெ­ரிக்­காவே தனது நாட்­டுக்குள் வரக்­கூ­டாது என தடை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான இந்தத் தடை உத்­த­ரவை ஐ.நா.வோ அல்­லது ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையோ பிறப்­பிக்­க­வில்லை.

அதே­வேளை, ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்கா இப்­போது உறுப்­பு­ரிமை கொண்­டி­ருக்­க­வு­மில்லை. அந்த வகையில் அமெ­ரிக்­காவின் தடை உத்­த­ர­வுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர­மா­னத்­திற்கும் நேர­டி­யான தொடர்பு இல்­லை­யென்றே கூற வேண்டும்.

இருப்­பினும் ஐ.நா.­வினால் நிய­மிக்­கப்­பட்ட தருஸ்மன் குழு­வி­ன­ரு­டைய விசா­ரணை அறிக்­கையின் தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே போர்க் குற்­றச்­சாட்­டுக்­களை அமெ­ரிக்கா முன்­வைத்­துள்­ளது என்­பதைக் கவ­னத்திற் கொள்ள வேண்­டி­யதைத் தவிர்க்க முடி­யாது. அதற்­காக தானே முன்­வந்து இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வஉேற்­றிய ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்கு வழங்­கிய இணை அனு­ச­ர­ணையைக் கைவிட்டு, 30-/1 தீர்­மா­னத்தில் இருந்து வில­கு­வ­தாக ஒரு­த­லைப்­பட்­ச­மாக அர­சாங்கம் முடி­வெ­டுத்­தி­ருப்­பது பொருத்­த­மான ஒரு நட­வ­டிக்­கை­யாகத் தோன்­ற­வில்லை.

விவாதம் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்கும்

இலங்­கையின் போர்க்­கால மனித உரி­மைகள் மற்றும் போர்க்­குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்­க­னவே மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­க­ளுக்கு அமைய பொறுப்பு கூற வேண்­டிய கடப்­பாடு குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் சில தினங்­களில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலையில், அதில் இருந்து வில­கு­வ­தாக அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பதும் சாதா­ரண விட­ய­மல்ல.  

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள உலக நாடு­களின் முன்­னி­லையில் தனக்கு எதி­ரான ஒரு பிரே­ர­ணைக்கு, ஒன்­றுக்கும் மேற்­பட்ட தட­வை­களில் இணை அனு­ச­ரணை வழங்கி, அதனை நிறை­வேற்­று­வ­தாக வாக்­க­ளித்து அதனை நிறை­வேற்­றிய அர­சாங்கம் எழுந்­த­மா­ன­தாக அதில் இருந்து விலகிக் கொள்ள முடி­யாது. அவ்­வாறு பின்­வாங்­கு­வது, பல்­வேறு  பக்­க­வி­ளை­வு­க­ளையும் பின்­வி­ளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்ற விவ­கா­ர­மாக விஸ்­வ­ரூபம் எடுப்­ப­தற்கே வழி­வ­குக்கும்.

உலக அர­சியல் ஒழுங்கில் ஜன­நா­யக

 நடை­மு­றையும் மனித உரி­மை­களைப் பேணு­கின்ற தன்­மையும் மிகவும் முக்­கி­ய­மான அம்­சங்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. அர­சியல், பொரு­ள­ாதாரம், பாது­காப்பு விட­யங்­களில் நாடு­களின் வாக்­குச்­சுத்தம் மிக முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. வாக்குத் தவ­று­ப­வர்கள் தொடர்பில் சர்­வ­தேசம் மிகவும் விழிப்­பாக நடந்து கொள்ளும் என்று நிச்­ச­ய­மாக எதிர்­பார்க்­கலாம்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, இந்த வருட மனித உரி­மைகள் பேர­வையில் மனித உரிமை ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த அறிக்கை ஏற்­க­னவே அர­சாங்­கத்­திற்குக் கைய­ளிக்­கப்­பட்டு, பதில் கோரப்­பட்­டி­ருந்த போதிலும், அது­கு­றித்த கருத்­துக்கள் எத­னையும் வெளி­யிட அர­சாங்கம் மறுத்­து­விட்­டது. அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கை பகி­ரங்­க­மாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சல் பச்­லெட்டின் அந்த அறிக்கை மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் உறுப்பு நாடு­களின் விவா­தத்­திற்கு விடப்­படும். அப்­போது பல்­வேறு கருத்­துக்கள் வெளி­யி­டப்­படும். அதன் மூலம் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்பில் அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­ப­டாத பல்­வேறு விட­யங்­களும் வெளிச்­சத்­திற்கு வரக் கூடிய சந்­தர்ப்­பமும் காணப்­ப­டு­கின்­றது.

ஆனால் இந்த விடயம் தொடர்­பி­லான விவாதம் நிச்­ச­ய­மாக இலங்கை அர­சுக்கு மகிழ்ச்சி அளிக்­கத்­தக்க வகையில் அமைந்­தி­ருக்­க­மாட்­டாது என்றும் நிச்­ச­ய­மாக நம்­பலாம். விவா­தத்தைத் தொடர்ந்து சர்­வ­தேச அரங்கில் இலங்கை பல்­வேறு நிலை­மை­க­ளுக்கு முகம் கொடுக்­கத்­தக்க சந்­தர்ப்­பங்­களும் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன.

ஏனெனில் மனித உரி­மைகள் நிலைப்­பாட்டில், மனித உரி­மை­களைப் பேணி நடக்­கின்ற கைங்­க­ரி­யத்தில் இலங்­கையை மிகவும் உன்­னிப்­பாகக் கண்­கா­ணிக்க வேண்டும் என்­ப­தையும் மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சல் பச்லெட் தனது அறிக்­கையில் அழுத்தி உரைத்­தி­ருக்­கின்றார்.

நிலைமை என்ன?

பொறுப்பு கூறும் கடப்­பாட்டில் முன்­னைய அர­சாங்க காலத்தில் சில முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருந்த போதிலும். புதிய அர­சாங்­கத்தின் கடும் போக்கு அந்த முன்­னேற்ற நிலை­மை­களைப் பின்­ன­டையச் செய்­துள்­ள­மை­யையும் மனித உரி­மைகள் ஆணை­யாளர் தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

பிரே­ர­ணையில் இருந்து வில­கிக்­கொள்­வ­தாக அர­சாங்கம் தீர­்மா­னித்­தி­ருக்­கின்ற அதே­நே­ரத்தில் அந்த 30-/1 பிரே­ர­ணையை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்­கையில் வலி­யு­றுத்தி உள்ளார். பிரே­ர­ணையில் இருந்து வெளி­யே­று­வதன் மூலம் பொறுப்புக் கூறு­கின்ற கடப்­பாட்­டிற்கு முற்­றுப்­புள்ளி இடு­கின்ற பாங்­கி­லான அர­சாங்­கத்தின் அணு­கு­முறை வெளிப்­பட்­டி­ருப்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்டி பிரே­ர­ணையின் பல்­வேறு அம்­சங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் அவர் குறிப்­பிடத் தவ­ற­வில்லை.

இந்த வருட அமர்­வின்­போது மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் இலங்கை தொடர்­பான மனித உரிமை நிலை­மைகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு அவை தொடர்பில் விவா­திக்­கப்­ப­டு­மே­யொ­ழிய புதிய தீர்­மா­னங்கள் எத­னையும் எடுப்­ப­தற்குத் திட்­ட­மி­டப்­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்ட ஓர் ஒழுங்­கி­லேயே இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் மனித உரி­மைகள் பேர­வையில் கையா­ளப்­படும். கையா­ளப்­பட்டு வரு­கின்­றது. அந்த வகையில் கடந்த அமர்வின் போது இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட கால அவ­காசம் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. அந்த அவ­காசம் முடி­வ­டையும் வரையில் புதிய தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்­கான அறி­கு­றி­க­ளையோ ஏற்­பா­டு­க­ளையோ மனித உரிமைப் பேர­வையில் இது­வ­ரையில் காணப்­ப­ட­வில்லை.

ஆகவே, இம்­முறை அர­சாங்கம் தனது கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்கு ஒரு சந்­தர்ப்­பமும் அதனைத் தொடர்ந்து அவையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஆணை­யா­ளரின் அறிக்கை தொடர்­பி­லான விவா­தத்தில் கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பமும் கிட்­டலாம். அத­னை­விட வேறு எந்­த­வித முன்­னேற்­றமும் இப்­போ­தைக்கு ஏற்ப­டக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் தென்­ப­ட­வில்லை.

குறிப்­பாக அர­சாங்கம் தலை­கீ­ழாக நின்­றா­லும்­கூட உட­ன­டி­யாக ஐ.நா. தீர்­மா­னத்தில் இருந்து இல­குவில் அதனால் வெளி­யே­றி­விட முடி­யாது. அதே­போன்று ஏற்­க­னவே இலங்கை அர­சினால் வழங்­கப்­பட்­டுள்ள இணை அனு­ச­ரணை என்ற நிலைப்­பாட்­டையும் கைவிட்டு முழு­மை­யாக அதி­லி­ருந்து வில­கி­வி­டவும் முடி­யாது.

இத்­த­கைய மாற்­றங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு மனித உரிமைப் பேரவை புதி­தாகத் தீர்­மா­னங்­களை உரு­வாக்கி அதனை பேர­வையின் அமர்வில் தீர்­மா­ன­மாக நிறை­வேற்ற வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் இந்த அமர்வின் போது இடம்­பெறும் என்று எழுந்­த­மா­ன­மாகக் கூற முடி­யாது. ஏனெனில் இது போன்ற விட­யங்­களைக் கையாள்­வ­தற்கு மனித உரிமைப் பேர­வையில் நிலை­யியல் கட்டளை வடி­வி­லான காலக்­கி­ர­மத்­துடன் கூடிய ஒழுங்கு முறைகள் இருக்­கின்­றன. அந்த ஒழுங்கு முறை­களை மீறி அர­சாங்­கத்தின் கடும் போக்­கிற்கும், தீவி­ர­மான உணர்வு நிலைப்­பாட்­டிற்கும் ஏற்ற வகையில் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற மாட்­டாது.    

ஆனால் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக பொறுப்பு கூறு­கின்ற கட­ப்பாட்டில் இருந்து இல­கு­வாக வெளி­யே­றி­வி­டலாம் என்ற வகை­யி­லான ஒரு மாயத் தோற்­றத்தை சிங்­கள மக்கள் மத்­தி­யிலும், சிங்­களப் பேரின தீவி­ர­வாதப் போக்­கு­டைய தனது ஆத­ரவு தளத்­திலும் அரசு ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது.

சிங்­கள மக்­க­ளையும் தனது ஆத­ரவு தளத்தில் உள்­ள­வர்­க­ளையும் தனக்கு வச­தி­யான வகையில் கையாள்­வ­தற்கு இரா­ணுவத் தள­பதி மீது விதிக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்க தடை உத்­த­ரவு மிகவும் வச­தி­யான ஒரு வாய்ப்பை அர­சுக்கு ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கின்­றது.

இந்த வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி வரப்­போ­கின்ற பொதுத் தேர்­தலில் சிங்­கள மக்­களின் பேரா­த­ரவைத் திரட்­டு­வ­தற்­கான ஒரு தந்­தி­ரோ­பாயச் செயற்­பா­டா­கவும் இந்த விட­யத்தை அரசு கையாண்­டி­ருக்­கின்­றது என்­பதே உண்­மை­யான அர­சியல் நிலைமை.

அதே­நே­ரத்தில் ஐ.நா. பிரே­ர­ணையில் இருந்து விலகிக் கொள்­வ­தாக அர­சாங்கம் எடுத்­துள்ள முடிவு குறித்து காரண காரி­யங்­க­ளு­ட­னான அச்ச நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. ஓர் அர­சாங்கம் மனித உரிமைப் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் இருந்து விலகிக் கொள்ள விரும்­பினால் அவ்­வாறு விலகிக் கொள்­ள­லாம்­தானே, அவ்­வாறு வில­கினால் மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற அர­சாங்­கத்தின் மீதான சர்­வ­தே­சத்தின் பிடி கைவிட்டுப் போகலாம் அல்­லவா என்ற வகை­யி­லான நியா­யப்­பா­டு­களும் சாதா­ரண தமிழ் மக்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வாறு அர­சாங்கம் வில­கிக்­கொண்டால்,  ஐ.நா. செயற்­பாட்­டா­ளர்­க­ளையும், சர்­வ­தேச செஞ்­சி­லுவைக் குழு­வி­ன­ரையும் பாதுகாப்பு கார­ணங்­களைக் காட்டி வெளி­யேற்­றி­விட்டு சாட்­சி­ய­மற்ற யுத்­த­மாக முள்­ளி­வாய்க்­காலில் அரச படைகள் கோர­த்தாண்­டவம் ஆடி­யதைப் போன்ற ஒரு நிலையில்; அர­சாங்கம் செயற்­பட ஆரம்­பித்­து­வி­டுமே என்ற அச்­சமும் சாதா­ரண மக்கள் மத்­தியில் தென்­ப­டு­கின்­றது.

இந்த நிலையில் அர­சாங்கம் ஐ.நா. தீர்­மானம் தொடர்பில் எடுத்­துள்ள நிலைப்­பாட்டைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே நன்கு அறிந்­தி­ருந்­தது என்றும் அது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் வட்­டா­ரங்­களில் தெளி­வு­ப­டுத்தி அவர்­களை உசார்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற தோற்றம் தமிழ்த்­த­ரப்பில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஐ.நா. தீர்­மா­னத்தில் இருந்து அரசு வெளி­யே­றினால் அதற்­கான மாற்று நட­வ­டிக்­கை­க­ளுக்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தயா­ராக இருப்­ப­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார். ஆயினும் அந்த மாற்று நட­வ­டிக்கை என்­ன­வாக இருக்கும் என்­பது குறித்த விப­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை. அதற்­கான அவ­சியம் இப்­போது ஏற்­ப­ட­வில்லை என்ற கார­ணத்­திற்­காக அதனை அவர் வெளி­யி­டாமல் இருக்கக் கூடும்.

விட்­டுக்­கொ­டுப்­பு­மில்லை வினைத்­தி­ற­னு­மில்லை

ஆனால் இங்­கேயும் பொதுத்­தேர்­த­லை­யொட்­டிய பிர­சார அர­சியல் நெடியை உணர முடி­கின்­றது. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதில் தீவி­ர­மாக உள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அதற்­காக சர்­வ­தேச நாடுகள் மத்­தியில் சாத­க­மான ஒரு நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருப்­ப­தா­கவும் அது விட­யத்தில் தொடர்ந்து செயற்­பட்டு வரு­வ­தான ஒரு தோற்­றமும் ஏற்­க­னவே மக்கள் மத்­தியில் தொடர்ச்­சி­யாகக் காட்­டப்­பட்டு வந்­துள்­ளது.

இந்த நிலையில் ஐ.நா. தீர்­மா­னத்தில் இருந்து அர­சாங்கம் வெளி­யே­று­வ­தற்­கான முடிவை மேற்­கொண்­டுள்­ள­மை­யினால், தமிழ் மக்கள் அனை­வரும் ஓர் அணியில் அதுவும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பின்னால் அணி திரள வேண்டும் என வலி­யு­றுத்தி கருத்­துக்கள் வெளி­யாகத் தொடங்கி இருக்­கின்­றன.

தேர்­த­லாக இருந்தாலும்சரி தேர்தல் இல்லாவிட்டாலும்சரி, சிங்கள பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தி அதனைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பல்வேறு வழிகளிலும் பாடுபட்டு வருகின்ற சிங்கள பௌத்த தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு உறுதியாக முகம் கொடுப்பதற்காக தமிழ் மக்கள் ஓரணியில் உறுதியாக ஒன்றிணைந்திருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் மக்கள் மாத்திரம் ஓரணியில் திரண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் தாங்கள் ஏன் ஓரணியில் ஒன்று திரளாமல் இருக்கின்றன என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளானாலும்சரி, தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளானாலும்சரி தாங்கள் தாங்களே பெரியவர்கள், தங்களால் மட்டுமே முடியும் என்ற வகையிலான ஒற்றைப் போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கைகள் என்று வரும்போது எல்லோரும் கிட்டத்தட்ட ஒத்த வகையிலான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்  தமிழ்  மக்களை  முதன்மைப்படுத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் மற்றும் நாடாளுமன்றம் என்பவற்றில் உறுப்புரிமைகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே நோக்கம் கொண்டு செயற்படுகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தங்களுக்குள் விட்டுக்கொடுத்து. ஒன்றிணையத் தயாராக உள்ள மக்களை அணிதிரட்டி தமிழ்த்தரப்பை அரசியலில் பலப்படுத்துவதற்கும், பேரம் பேசுவதற்கான சக்தியை வளர்த்துக் கொள்வதற்குமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இல்லை.

இந்த நிலைமை மிகவும் மோசமானது. தமிழ் மக்களை அரசியலில் மேலும் மேலும் பின்னடையச் செய்வதற்கும், பாரதூரமான நிலைமைகளை எதிர்கொள்வதற்குமே இந்த நிலைமை இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.    

- பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தரப்புடன் கூட்டு ; காலை...

2025-02-18 13:26:36
news-image

கறுப்பு பைலுடன் சபைக்கு வந்த ஜனாதிபதி...

2025-02-17 21:09:44
news-image

மிக மோசமான கொலை! : ஜனநாயகத்தின்...

2025-02-18 11:22:36
news-image

இலங்கையராகவும் தமிழராகவும் இருந்து தமிழில் தேசிய...

2025-02-17 14:25:08
news-image

‘தோட்ட மக்களாகவே’  அவர்கள் இருப்பதற்கு யார்...

2025-02-16 16:19:01
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக் கட்சியின் அஸ்தமித்துப்போன...

2025-02-16 15:54:02
news-image

இந்தியா, சீனாவை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு...

2025-02-16 15:08:22
news-image

நமீபிய விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் சாம்...

2025-02-16 15:01:55
news-image

'வார்த்தை தவறும் அரசாங்கமும் பலவீனமான எதிர்க்கட்சியும்'

2025-02-16 14:24:02
news-image

'இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்' என்ற...

2025-02-16 12:44:24
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்கள்...

2025-02-16 12:03:58
news-image

தையிட்டி விகாரை இனஅழிப்பின் குறியீடு

2025-02-16 12:03:38