வன்முறைகளிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கக் கோரி மகஜர் கையளிப்பு

Published By: Priyatharshan

16 Jun, 2016 | 09:38 AM
image

( மயூரன் )

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கக் கோரி  யாழ். ஊடக அமையத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

 “ஆட்சி மாற்றத்தின் பின்னரான ஊடக சுதந்திரத்தில் முன்னேற்றமேற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில், முன்னணி சகோதர ஊடக செயற்பாட்டாளர் பெடி கமகே தாக்கப்பட்டமை அச்சத்தை தருவதாக அமைந்துள்ளது. 

கடந்த 2000ஆம் ஆண்டில் சக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் படுகொலை, தமிழ் தரப்பினில் 41 பேரை காவு கொண்டுள்ளது.

இதில் காணாமற்போன பலர் குறித்து தகவல்கள் இல்லை. காணாமற்போனவர்கள் பற்றி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், பற்றி பல முறைப்பாடுகள் தங்கள் அலுவலகத்துக்கு கிடைத்திருந்தன. 

இவை தொடர்பில் விசாரணைகள் ஏதுமின்றி கிடப்பினில் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்முடன் இணைந்து செயற்படும் சக ஊடகவியலாளர் பெடி கமகே அரசியல் பின்னணியில், பணியின் போது கொலை செய்யும் நோக்குடன் தாக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிர்தப்பியுள்ளார். 

முகவர்களான இரண்டு சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறு முகவர்கள் அகப்படுவதும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதுமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ள போதும், பின்னணியில் இருக்கும் பெரிய தலைகள் கைதாவதில்லை.

 தற்போதைய சூழலிலும் அரசியல் பின்னணியில் சூத்திரதாரிகள் தப்பித்துக்கொள்ள அரசாங்கம் அனுமதியளிக்கக்கூடாது. 

படுகொலையான மற்றும் காணாமற்போன எமது சகோதர ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாம் கோரும் அதேவேளை, சகோதர ஊடகவியலாளர் பெடி கமகே படுகொலை முயற்சி சூத்திரதாரிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிப்பதுடன், பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த கோருகின்றோம்” என அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கார் - சைக்கிள் மோதி விபத்து...

2025-04-24 12:59:51
news-image

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வத்திக்கானுக்கு ...

2025-04-24 13:20:04
news-image

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால...

2025-04-24 12:57:35
news-image

வானில் நாளை அரிய காட்சி தென்படும்

2025-04-24 13:14:38
news-image

பஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-04-24 12:15:23
news-image

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாக்குகளால் மக்கள்...

2025-04-24 13:12:33
news-image

ஜனாதிபதி பேரினவாத சக்திகளின் ஒரு சூழ்நிலை...

2025-04-24 12:39:48
news-image

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திய வேட்பாளர் கைது

2025-04-24 12:39:32
news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22