எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் 86 இலட்சம் ரூபாயுடன் தலைமறைவு

Published By: Digital Desk 4

22 Feb, 2020 | 02:43 PM
image

வெள்ளவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் கடமையிலிருந்த நபர் 86 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார். 

இது குறித்து, எரிபொருள் நிலைய உரிமையாளர் சோமசுந்தரம் கேதீஸ்வரம்பிள்ளை வெள்ளவாய பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளவாய நகரின் “ஊவா மெடிகல் சென்டர்” என்ற மருந்து நிலையத்தை நடத்தி வந்த சோமசுந்தரம் அகேதீஸ்வரம்பிள்ளை தனது வர்த்தக நிலையத்தில் மிகவும் நம்பிக்கையாக இருந்து வந்த ஊழியரை வெள்ளவாயவிலுள்ள தனது எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளராக நியமித்தார்.

கடந்த இரு வாரங்களாக எரிபொருள் நிலைய இலாபப் பணம் தமக்குக் கிடைக்கப் பொறாமையால் அது குறித்துச் சம்மந்தப்பட்ட ஊழியரிடம் (பொறுப்பாளரிடம்) வினவினார். அதையடுத்து  குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில்  86 இலட்ச ரூபா பணம் தனக்கு வரவேண்டியுள்ளதாக  பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளவாய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில்  இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54