மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர் இன்று அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மகளிருக்கான 7 ஆவது இருபதுக்கு - 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பாகி மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் 4 முறை சாம்பியான அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுக்ள மற்றும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மொத்தம் 6 மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. தொடக்க நாளான இன்று சிட்னியில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மெக் லானிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.
20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதியாக ஆடிய 31 ஆட்டங்களில் 26 இல் வெற்றி பெற்றுள்ளனர். அண்மையில் முத்தரப்பு தொடரை கைப்பற்றியது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
இதேவேளை 20 ஓவர் உலக கிண்ண போட்டி வரலாற்றில் இந்திய மகளிர் அணியானது அணி அரையிறுதிக்கு மேல் தாண்டியதில்லை. அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எதிர்பார்ப்புடன் இந்திய அணியனர் நம்பிக்கையுடன் இன்றைய தினம் களமிறங்கவுள்ளனர்.
Photo Credit : ICC
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM