இந்தியாவின் சென்னையில் பெண்களின் கழிவறைப்பகுதிகளின் இரகசியமாக காணொளி எடுத்த பேராசிரியர் சிக்கியுள்ளார்.
சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இரவில் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சியில் இருந்த மாணவி ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்ற போது திடீரென கழிவறைக்குள் சிறிய அளவிலான வெளிச்சம் தென்பட்டதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியை பார்த்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது கழிவறையின் வெளியில் இருந்து தண்ணீர் குழாயையொட்டி இருந்த சிறிய துளை வழியாக கைபேசியில் ஒருவர் வீடியோ எடுப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மறுபுறம் கைபேசியில் படம் பிடித்த வாலிபர் யார்? என பார்த்த போது அவர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் என தெரியவந்துள்ளது.
இவ்விடயம் ஐ.ஐ.டி. வளாகத்தில் காட்டு தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த பேராசிரியரின் கைபேசியை சோதனையிட்ட போது, மாணவியின் ஆபாச வீடியோ இருந்தது. உடனடியாக இதுபற்றி பொலிஸாருக்கு தெரிபடுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான பேராசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்தேக நபர், பல மாதங்களாகவே ஆய்வக கழிவறையில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளமை கைபேசி வாயிலாக தெரியவந்துள்ளது. அத்தோடு இன்னுமு் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளமையால், அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம், குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM