கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸை வழிமறித்து இளைஞரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்

Published By: Digital Desk 4

19 Feb, 2020 | 09:01 PM
image

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று இரவு 7மணியளவில் 3கிலோ 720கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஈரட்டை  பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த பஸ்ஸை துரத்தி சென்று ஈரட்டை பகுதியில் வழிமறித்து இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 3கிலோ 720கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர். 

சாஸ்திரி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த 24வயதுடைய இளைஞனை கைது செய்த போக்குவரத்து பொலிஸார் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர்  குறித்த இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10