பொலிசாரின் செயற்பாட்டால் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்  சங்கத்திற்கு நஷ்டம் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 

Published By: Digital Desk 4

19 Feb, 2020 | 07:46 PM
image

முல்லைத்தீவு   மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு  சங்கங்களின் சமாசத்திற்கு  பொலிசாரின் செயற்பாட்டால் 14 இலட்சம் ரூபா நட்டம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமாசத்தின் தலைவர் ரீ.அன்ரனி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்திற்குச் சொந்தமான கூழர்வாகனத்தில் மீன் ஏற்றிச் சென்ற சமயம் அதில் கஞ்சா கடத்தப்படுவதாக தெரிவித்து மதவாச்சிப் பொலிசாரால் தடுத்துவைக்கப் பட்டுவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் குறித்த வாகனத்தில் 3500 கிலோ எடையுடைய மீனை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்ட போதே இவ்வாறு மறிக்கப்பட்டு சோதனை இடப்பட்டது.

இதனால் குறித்த நேரத்திற்குள் மீனைக் கொண்டு செல்ல முடியாததால் தமக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக மேற்படி சமாசத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இன்றைய தினம் (19-02-2020) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது  பொலிசாரின் செயற்பாட்டால்; சமாசத்திற்கு சுமார் 14 இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றைய தினம் சமாசத்தின் தலைவர் பொது முகாமையாளர் குறித்த வாகனத்தின் சாரதி ஆகியோர் இணைந்து இம்முறைப்பாட்டை செய்திருப்பதாக  சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26