நாணயத்தாள்களின் கொரோனா தொற்று: அழிக்க உத்தரவிட்ட சீன அரசு

Published By: Digital Desk 3

19 Feb, 2020 | 05:27 PM
image

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29  நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது.

சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது.

சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இருந்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09