ஒரு கோடிக்கும் அதிகம் பெறுமதியுடைய தங்கத்தை கடத்த முயன்றவர் கைது!

Published By: Vishnu

17 Feb, 2020 | 07:27 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பிலிருந்து ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுக்களை சென்னைக்கு கடத்தவிருந்த இலங்கை பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று காலை 7.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லவிருந்த UL 121 விமானத்திற்கூடாகவே இவ்வாறு தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் குறித்த பயணி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அவரது பாதணிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

1400 கிராம் நிறையுடைய இந்த தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி ஒரு கோடியே 28 இலட்சத்து 74 ஆயிரத்து 848 ரூபா என்று சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

தங்கம் கடத்த முயன்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53