bestweb

பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவதற்கு நடவடிக்கை!

Published By: Vishnu

17 Feb, 2020 | 11:29 AM
image

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருக்கிறது. 

முதலாவது தவணையின் போது விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலைகள் கூடுதல் கவனத்தை செலுத்துவதை கண்டறிந்த பிறகு இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆராய்ந்திருக்கிறார்கள். இதனால் முதலாம் தவணைப் பரீட்சைகளுக்கு தங்களை தயார் செய்வதில் மாணவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரமே இருக்கிறது. 

எனவே இந்தப் பரீட்சைகளை நடத்துவது நடைமுறைச் சாத்தியமானதல்ல என்று அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தெரியவருகிறது. இந்தக் கலந்துரையாடல்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு பெற்றோர் குழுவும் அழைக்கப்பட்டிருந்தார்கள். 

கல்வி அமைச்சின் அதிகாரிகள் எடுத்த முடிவின் பிரகாரம் அடுத்த வருடத்தில் இருந்து பத்தாம் வகுப்புக்கு கீழ்ப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. 

பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்விக்கு பாடசாலைகளில் கூடுதலான நேரம் செலவிடப்படுவதால் விளையாட்டுக்கள் மற்றும் ஏனைய புறக்கிருத்திய நடவடிக்கைகளுக்கு குறைந்தளவு நேரமே செலவிடப்படுகிறது என்று மக்களிடம் இருந்து முறைப்பாடுகள் வந்ததன் விளைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் , மாணவர்கள் பெருமளவு தனியார் வகுப்புக்களில் செலவிடுவதாகவும் தெரியவருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47