மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி, கிரான் சந்தியில் லொறி ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பம்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்ததுடன் இருவார் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (16) காலை11 மணியளவில், கிரான் சந்தியில் மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த ஏனைய இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கிரான் காளி கோவில் வீதியைச் சேர்ந்த 71 வயதுடைய ரங்கன் ராமசாமியும் அவருடைய மகனான 41 வயதுடைய ராமசாமி விஜயபாஸ்கர், என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ள ஏறாவூர் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM