க.பொ.த. சாதாரணதரம், க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் கோர பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்தலை நோக்காக கொண்டு இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய முறையின் கீழ் தரம் 05புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தனிப்பட்ட இலக்கம் வழங்கப்படும் என்பதோடு, குறித்த இலக்கம் பரீட்சைகள் திணைக்களத்தின் தரவுத்தளத்துடன் இணைக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் இணைப்பாட விதான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக தனிப்பட்ட மாணவர் இலக்கமானது, மாணவர் தரவுத்தளத்துடன் இணைக்கப்படும் என்பதோடு இதன் மூலம் இலகுவாக மாணவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு க.பொ.த. உயர்தரப் பாடங்களான கணக்கியல் ,உயிரியல், தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம் ,தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு சிக்கலான கணிப்புகளை மேற்கொள்ளமுடியாத கணிப்பான்கள் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவது பற்றி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM