ஆர்.பி
கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமா? அது சீனாவால் உருவாக்கப்பட்டதா? அல்லது சீனாவில் உருவானதா? இன்றேல் வுஹான் ஆய்வு கூடத்திலிருந்தும் தப்பிய வைரஸால் கொரோனா உருவானதா? என பல்வேறு கோணங்களில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து சர்வதேச தொலைக்காட்சி சேவை ஒன்று ஆய்வொன்றை மேற்கொண்டது.
அதில் கூறப்பட்ட கருத்துக்கள் வருமாறு: பிரித்தானிய பத்திரிகையான டெய்லி மெயில் பத்திரிகையே கொரேனா வைரஸ் ஆய்வு கூடமொன்றிலிருந்து வெளியானதாக தகவலொன்றை முதலில் வெளியிட்டது. அதில் சீனா வுஹானில் சார்ஸ் மற்றும் இபோலா மற்றும் கொடிய வைரஸூகள் தொடர்பில் ஆராய ஆய்வு கூடமொன்றை நிறுவியது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு அதிலிருந்தும் தப்பிய வைரஸ் இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாமென அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆய்வு கூடமானது வுஹான் மாகாணத்தில் அமைந்துள்ள விலங்குகள் சந்தைக்கு மிகவும் அணித்தானதாகும். அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு கூடத்தில் இருந்தும் தப்பி விலங்குகள் சந்தைக்கு பரவியிருக்கலாமென மேற்படி பத்திரிகை சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. சார்ஸ் வைரஸூம் இதே போன்று ஆய்வு கூடத்திலிருந்து தப்பிய வைரஸால் பரப்பப்பட்டதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, வொஷிங்டன் டைம்ஸ் என்ற பத்திரிகை ஒருபடி மேலாகச் சென்று கொரோனா வைரஸ் ஆய்வு கூடமொன்றில் உருவாக்கப்பட்டிருக்கலாமென்றும் இந்த தகவல் உயிரியல் ஆய்வாளர் ஒருவரினால் அறிவி்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்களாகவே உள்ளன என குறித்த பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த வைரஸ் கனடாவி்ல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இரண்டு சீன முகவர்கள் கனடாவிலிருந்தும் கொரோனா வைரஸை சீனாவுக்குள் கடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஊடகமொன்று வுஹான் தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆய்வு கூடத்தில் சார்ஸ் மற்றும் இபோலா தொடர்பான கற்கைநெறிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வு கூடத்துக்கும் வுஹான் விலங்குகள் சந்தைக்குமிடையே 32 கிலோமீற்றர் இடைவெளி மாத்திரமே உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வுஹான் கடலுணவு சந்தையானது வைரஸ் பரவுவதற்கான முக்கிய இடமாக விளங்கியதாக ஊர்ஜிதம் செய்யப்ப்ட்டுள்ள நிலையில் சகல தரப்பினரும் குறித்த ஆய்வு கூடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் உறுதியாக எதனையும் கூற முடியாத நிலைமைகளே இருந்து வருகின்றன. அத்துடன் இவையாவும் தவறான தகவல்கள் எனவும் கூறுகின்றனர்.
உண்மையில் கொரோனா வைரஸ் சீனா ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்றால் இது தொடர்பில் விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதேவேளை நோய் பாதுகாப்பு மத்திய நிலையம் மற்றும் உலக சுகாதார நிலையம் என்பன இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்கின்றன. எனினும் இந் நிறுவனங்களும் இதுவரை கொரோனா ஓர் உயிரியல் ஆயுதம் என கூறவில்லை. அவர்கள் வுஹானிலுள்ள விலங்குணவு மற்றும் கடலுணவு சந்தையிலேயே இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். அதேவேளை இதுவரை குறித்த ஆய்வு கூடத்தில் மேற்படி இரு நிறுவனங்களும் தமது ஆய்வுகளை மேற்கொள்வில்லை.
இந்த வைரஸ் கனடாவில் உற்பத்தி செய்யப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக கனடாவில் தேசிய உயிரியல் நுண்ணுயிர் ஆய்வு கூடத்திலிருந்தும் மார்ச் 29 ஆம் திகதி மர்மக் கப்பலொன்று புறப்பட்டு சீனாவை சென்றடைந்ததாகவும் குறித்த கப்பலில் நோய்க் காவிகள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. கனடாவிலுள்ள விஞ்ஞான நிலைய கருத்தின் படி இது ஓர் உயிரியல் ஆயுதம் எனவும் 4 மாதங்களுக்கு பின்னர் சீன உயிரியலாளர்கள் குழுவொன்று (பின்னர் அவர்கள் சீன முகவர்கள் என அழைக்கப்பட்டனர்) இந்த ஆய்வு। கூடத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இந்த வைரஸை கடத்தியிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளது. இதனை கனடா மறுத்துள்ளது.
அதேவேளை, மேற்படி ஆய்வு கூடத்தில் பணியாற்றிய சியாங் கூ சூ என்ற சீனப்பெண் ஆய்வாளர் அங்கிருந்தும் கனேடிய அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டார். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பில் எதையும் உறுதியாக கூற முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அத்துடன் இக்கேள்விகளுக்கு விடை காண முடியாத நிலைமைகளே தொடர்கின்றன. மறுபுறம் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் குறித்து சீனா தெளிவாக எதனையும் கூறாத போதிலும் இதனை மறுத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. அதாவது அமெரிக்கா கொரோனா வைரஸை வுஹானில் பரப்பியதாகவும் கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதம் எனவும் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறெனினும் இச்செய்திகள் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் இந்தக் கேள்விகள் தொடர்ந்தும் எழுந்த வண்ணமே உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM