யுவதி மற்றும் சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் ; இரு தந்தை உட்பட இளைஞர் கைது!

16 Feb, 2020 | 10:46 AM
image

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் யுவதி மற்றும் இரு சிறுமிகளை கடந்த பல நாட்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் உட்பட இரு தந்தையர்களை உறவினரின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக  வீட்டில் இருந்த உறவினர்  ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை சிறுமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  பெற்றோரால் பூவரசங்குளம் பொலிஸில் நேற்று மாலை முறைப்பாடு செய்தமையையடுத்து,  பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக  வீட்டில் வைத்து அவருடைய தந்தை பாலியல் துஸ்பிரயோக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம்  பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின்  தந்தையை  (41) பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும், மாங்குளம் பகுதியில்  17 வயது யுவதி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து குறித்த யுவதியின் தந்தையை (39)  பொலிஸார் கைது செய்துள்ளனர்.                                                                                              

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43