(எம்.ஆர்.எம்.வஸீம்)
சட்டமா அதிபரை இலகுவில் நீக்க முடியாது. அவ்வாறான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
அத்துடன் சின்னம் முக்கியமில்லை. ஐக்கியமாக செயற்பட்டால் பொதுத் தேர்தலில் சிறந்த வெற்றியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.
வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
சட்டமா அதிபர் தொடர்பாக அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. அவரை நீக்கும் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் சட்டமா அதிபரை இலகுவில் நீக்கமுடியாது. அத்துடன் சட்டமா அதிபர் அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்றார். அதனால் அவரை இலகுவில் நீக்கமுடியாது.
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. அதுதொடர்பில் எந்த பிச்சினையும் இல்லை. மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியுமானவகையில் எமது திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில் அதனை நாங்கள் வெளிப்படுத்துவோம்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் எமக்கு அது சவால் இல்லை. அவர்களுக்குள் ஏற்படும் பிளவை பயன்படுத்திக்கொண்டு தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இல்லை. எமது வேலைத்திட்டங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெறும் சக்தி எமக்கிருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM