உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸானது வௌவால்களில் தோன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் விலங்குகள் மூலம் மனிதருக்கு பரவியுள்ளதாக ஏற்கனவே விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததாகும்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தோனேசியாவிலுள்ள சந்தைகளில் வௌவால்கள், பாம்புகள் உள்ளடங்கலான பிராணிகள் தொடர்ந்து உணவுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுலவேஸி தீவிலுள்ள தொமோஹொன் எக்ஸ்றீம் இறைச்சி சந்தை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், தமது சந்தையில் வர்த்தகம் சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் தாம் விற்கும் வன விலங்குகளின் இறைச்சிகளை கொள்வனவு செய்ய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து விஜயம் செய்த வண்ணம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
அந்த சந்தையில் வௌவால் இறைச்சியை விற்கும் ஸ்ரென்லி திம்புலெங் கூறுகையில், தனது சந்தையில் தொடர்ந்து வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் தான் விற்பனைக்கு வைக்கும் வௌவால் இறைச்சிகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடுவது வழமையாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் விழாக் காலங்களில் தினசரி 50 முதல் 60 வௌவால்களை விற்பதாகத் தெரிவித்த அவர், தனக்கு வௌவால் விற் பனை மூலம் 60,000 ரூபியா வரை பணம் கிடைப்பதாகக் கூறினார்.
வட சுலவெஸி தீவிலுள்ள மினஹஸன் மக்கள் தமது பாரம்பரிய உணவாக வௌவால் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படும் பானிகி என்ற கறி உணவை உண்டு வருகின்றனர்.
மேற்படி உணவுத் தயாரிப்பின்போது துர்மணத்தைத் தவிர்க்க முதலாவதாக வௌவால்களின் அக்குள்களிலும் கழுத்திலுமுள்ள சுரப்பிகள் அகற்றப்படுகின்றன. அதன் பின் வௌவாலின் உடலிலுள்ள ரோமத்தை அகற்ற அந்த உடல் நெருப்பில் வாட்டப்படுகிறது.
தொடர்ந்து பெறப்படும் வௌவால் இறைச்சி சுத்திகரிக்கப்பட்டு துண்டுகளாக்கப்பட்டு மசாலாப் பொருட்கள் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கறியாக சமைக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM