மைதான காணியை வன வளதிணைக்களம் அபகரிக்க முயற்சி

Published By: Digital Desk 4

13 Feb, 2020 | 12:35 PM
image

வவுனியா நாலாம்கட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தாம் மைதானமாக பயன்படுத்திய பகுதியை இன்றையதினம் துப்புரவு செய்ய சென்றபோது வனவள திணைக்களம் அதற்கு தடையை ஏற்படுத்தியமையால் சற்றுநேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் 2007 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்த நிலையில் அதில் சிறிய இராணுவசாவடி ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின்னர் குறித்த பகுதியை அபகரிப்பதற்கு பலர் முயற்சி செய்தபோதும் மக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த பகுதி பற்றைவளர்ந்து காடு மண்டி கிடக்கின்றது. இதனை மீண்டும் மைதானமாக பயன்படுத்துவதற்காக இன்றையதினம் இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி அதனை துப்புரவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இதன்போது அப்பகுதிக்கு சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள், இது தமது திணைக்களத்திற்கு உரிய பகுதி என்று தடை ஏற்படுத்தியமையால் இளைஞர்களிற்கும் அவர்களிற்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்ன வருகை தந்திருந்தார்.இருதரப்புடனும் கலந்துரையாடிய அவர் குறித்த பகுதியை மைதானமாக பயன்படுத்துவதற்கான வேண்டுகோளை எழுத்துமூலமாக வழங்குமாறு தெரிவித்ததுடன் அதனை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முன்வைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியழிக்கப்பட்டமைக்கமைய குழப்பம் முடிவிற்கு வந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45
news-image

பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகள்...

2025-03-14 22:11:35