(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பொதுஜன பெரமுனவோ , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ உரிமை கோர முடியாது எனத் தெரிவித்த சுதந்திர கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க, சதந்திர கட்சியுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியும் என்று பொதுஜன பெரமுன எண்ணிவிடக் கூடாது என்றும் கூறினார்.
தொடர்ச்சியாக ஏதேனுமொரு காரணத்தைக் கூறி முரண்பட்டுக் கொண்டிருப்பதால் எமது கூட்டணியிலிருந்து சிவில் அமைப்புக்கள் பிரிந்து செல்லக் கூடிய நிலைமை ஏற்படும். இதனால் பல இலட்சம் வாக்குகளை இழக்க நேரிடும். மக்கள் வெகுவிரைவாக அரசாங்கத்தை வெறுக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்றும் வீரகுமார திஸாநாயக்க மேலும் கூறினார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
கடந்த தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்தது எந்தவொரு கட்சியும் அல்ல. பொதுமக்களே அவரை தமது தலைவராகத் தெரிவு செய்தனர்.
அரசியல் கட்சிகள் மக்களுடன் இணைந்து செயற்பட்டன. எனவே பொதுஜன பெரமுன சுதந்திர கட்சி மீது குற்றஞ்சாட்டினாலும், சுதந்திர கட்சி பொதுஜன பெரமுன மீது குற்றஞ்சாட்டினாலும் சரியானது எது என்று மக்கள் தீர்மானிப்பார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.
சுதந்திர கட்சியுடன் முரண்படுவதன் மூலம் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்க முடியும் என பொதுஜன பெரமுன நினைக்கலாம். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லை. எம்முடன் முரண்பட்டுக் கொண்டு ஒரு போதும் வெற்றி பெற முடியாது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM