ஐரோப்பாவை தாக்கியுள்ள கியாரா புயலினால் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கியாரா புயலினால் அந்நாட்டின் கிழக்கு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு மற்றும் நூற்றுக்கணக்கான மக்களின் குடியிருப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
போலந்து
குறிப்பாக ஐாரோப்பாவின் போலந்து நாட்டில் அதிக காற்று வீசுவதுடன், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையை கிழித்த கியாரா சூறாவளி அவ் வீட்டில் உள்ள பெண் ஒருவரும் , இரு மகள்களும் அனர்த்தத்தில் சிக்கி பலியாகியுள்ள நிலையில் , பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.
சுவீடன்
அத்தோடு சுவீடனில் வீசிய கியாரா புயலினால் விமானத்தில் பயணம் செய்த நபர் ஒருவரை காணவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு , அங்கு காற்றினால் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஜேர்மன்
காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் ஜேர்மனில் வீசிய கடும் காற்றினால் பலியாகிள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு மற்றைய நபர் ஒருவர் ஸ்லோவேனியாவில் உயிரிழந்துள்ளார்.
பிரான்சின் மத்திய தரைக்கடல் தீவான் கோர்சிகாவல் இரவு சுமார் 220 கிலோமீற்றர் , 137 மைல் வேகத்திலும் கியாரா காற்று வீசியுள்ளது.
அத்தோடு குறித்த பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று , கடும் வெள்ளத்தினால் ஐரோப்பாவின் நாடுகள் சில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட உதவி (AFP)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM