இந்தியா ஈழத்தமிழர்கள் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் திருமதி ஆனந்தி சசிதரன் தமிழ் மக்கள் நலனில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்தவின் இந்திய விஜயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்தியாவின் பூரண ஒத்துல்லைப்புடனேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.இந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்.இந்திய பிரதமரின் இலங்கை மீதான அழுத்தம் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்வியாகவே உள்ளது.
இந்தியா தனது பூகோள நலனை மட்டும் பற்றி சிந்தித்து செயற்படாது ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பிலும் கரிசனை காட்ட வேண்டும்.இந்தியா தனது வெளிவிககர கொள்கையை மாற்ற வேண்டும்.ஈழத்தமிழர்களாகிய எமது பிரச்சனைகள் உரிமைகள் தொடர்பில் உண்மை நிலைமையுடன் எம்முடன் பேச வேண்டும்.
வெறுமனே மத்திய அரசுடன் பேசுவதை விடுத்து எம்முடனும் பேச வேண்டும். இது தொடர்பில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.
இன்று போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகியும் எமக்கான இனப் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் போரின் பொது படுகொலை செய்யப்பட்வர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.காணமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் ஆண்டாண்டு காலமாக வீதிகளில் போராடி கொண்டிருக்கின்றனர்.
இறுதி போரில் தாம் ஒப்படைத்த உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியாது நீதி கிடைக்காது எத்தனையோ உறவுகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இனியாவது சர்வதேசமும் இந்தியாவும் இதய சுத்தியுடன் செயற்பட்டு எமது இனப் பிரச்சனைக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM