நாடளாவிய ரீதியில் அரச பேருந்துகளில் ஏற்படும் பயணசீட்டு மோசடியினால் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வரையில் நஷ்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 107 டிப்போக்கள் காணப்படுகின்றன. அதில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தின் நடத்துனர்கள் மேற்கொள்ளும் பயணசீட்டு மோசடி காரணமாக இந்த இழப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கென்று குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. அந்த திடீர் சோதனை கடந்த வாரங்களில் முன்னெடுக்கப்பட்டது. இதில் ஒரு கட்டமாக கம்பஹா டிப்போவுக்கு சொந்தமான கடவத்தை - மாத்தறை அதிவேக மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்தில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது பேருந்தின் நடத்துனர் பல்லாயிரம் கணக்கான ரூபா பயணசீட்டு மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட பேருந்து நடத்துனரை உடனடி வேலைநீக்கம் செய்வதற்கும்நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர்மேலும்தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM