எயார் பஸ் விமான கொள்வனவிற்காக இலங்கைக்கு இலஞ்சம் வழங்கியுள்ள எயார் பஸ் விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர முடியும். இவ்விவகாரத்தில் எமது முன்னைய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
இந்த கொள்வனவில் மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக கடந்த 2016ஆம் ஆண்டே தெரிய வந்தது. இதன் பின்னரே குற்றப்புனாய்வு பிரிவு விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒரு சிலரது பெயர் பட்டியல் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கும் சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக தடை விதிக்கப்பட்டன.
இம்மோசடிகள் குறித்து 2017ஆம் ஆண்டு அறிக்கை கோரியிருந்த போதும் சிங்கப்பூர் அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதமே முழு அறிக்கையினையும் ஒ ப்படைத்தார்கள். அக்காலக்கட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.
இலங்கையில் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் 20 இலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கும், அரசாங்காத்துக்கும் இவ்விடயம் குறித்து ஆராய்வதற்கான பொறுப்பு காணப்படுகின்றன. முறைக்கேடுகள் எவ்வாறு இடம் பெற்றன, யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்து ஆராயப்படவேண்டும்.
கிடைக்கப் பெற்றுள்ள அறிக்கையின் பிரகாரம் 160 கோடி டொலர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மறுபுறம் ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் 20 இலட்சம் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மிகுதி நிதிக்கு என்ன ஆனது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எயார் பஸ் விமான கொள்வனவின் ஊடாக எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் விமான சேவை இதனால் மேலும் நட்டத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கு தொடர்புடைய நிறுவனத்தில் இருந்தே தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிடப்படும் நிறுவனத்தில் இருந்து விமானங்கள் கடனின் ஊடாகவும், முழுமையாகவும் கொள்வனவு செய்வதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அந்நிறுவணத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறை கேடு தொடர்பில் ஆரம்பக்கட்ட நடடிக்கைகளை எமது அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM