ஜெனிவா செல்­லமுன் பாது­காப்பு தரப்பை சந்­திக்­க­வுள்ள மங்­கள

Published By: Raam

14 Jun, 2016 | 10:02 AM
image

சர்­வ­தேச தரப்­பினால் இலங்கை இரா­ணுவம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு போர்க்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரிக்­கப்­படும் என்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டு­வரும் நிலையில் இறுதி யுத்த கால­கட்­டத்தில் கட­மை­யாற்­றிய இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள், முக்­கிய உறுப்­பி­னர்கள் மற்றும் முப்­ப­டை­களின் தள­ப­தி­க­ளுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் தலை­மை­யி­லான குழு­வினர் முக்­கிய சந்­திப்­பொன்றை நடத்­த­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழுவின் 32ஆவது கூட்­டத்­தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை விவ­கா­ரங்கள் தொடர்பில் எதிர்­வரும் 29ஆம் திகதி வாய்­மூல அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­துடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளக விசா­ரணை பொறி­மு­றைகள் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்ளார்.

இந்­நி­லையில் இலங்­கையில் இடம்­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக சர்­வ­தேச தரப்­பி­னரும் சிவில் அமைப்­பு­களும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளன .

இதே­வேளை புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக இலங்கை இரா­ணு­வத்தை போர்க்­குற்­ற­வா­ளி­க­ளாக நிரூ­பிக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­ற­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ ஆகியோர் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர். இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் இலங்கை தொடர்­பி­லான விவாதம் ஆரம்­பிக்க முன்னர் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யி­லான குழு­வினர் பாது­காப்பு தரப்­பி­ன­ருடன் முக்­கிய சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வுள்­ளனர்.

இறுதி யுத்த கால­கட்­டத்தில் கட­மை­யாற்­றிய இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள், முக்­கிய உறுப்­பி­னர்கள் மற்றும் முப்­ப­டை­களின் தள­ப­தி­க­ளையும் வெளி­வி­வ­கார அமைச்சர் தலைமையிலான குழுவினர் சந்திக்கவுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20