(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது, காலவதியான அனுமதிப்பத்திரத்துடன் கூடிய கைத்துப்பாக்கியால் ஏதேனும் குற்றங்கள் புரியப்பட்டுள்ளதா என்பது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இன்று நுகேகொட நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவினால் இது குறித்து மேலதிக நீதிவான் எச்.யூ.கே.பெல்பொலவுக்கு இன்று விஷேட அறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டது.
சோதனை உத்தரவுக்கு அமைய ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, இறுவெட்டுகள் உள்ளிட்டவை அரச இரசாயன பகுப்பயவுக்கு அனுப்பட்டுள்ள நிலையில், இன்று அது குறித்த வழக்கு நுகேகொடை மேலதிக நீதிவான் எச்.யூ.கே.பெல்பொல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் கடமைகளில் குறுக்கீடு செய்த விவகாரம் தொடர்பிலான பிரத்தியேக வழக்கின் உத்தரவுக்கு அமைய குரல் மாதிரிகளை பரிசீலிப்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் அழைத்துச்செல்லப்பட்டார்.
இதன்போது அவரிடம் குரல் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அவர் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நுகேகொடை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM