எயார் பஸ் மோசடி குறித்து ரணில் பாராளுமன்றில் தெரிவித்துள்ள கருத்து !

Published By: R. Kalaichelvan

07 Feb, 2020 | 05:41 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எயார் பஸ் கொள்வனவில் இடம்பெற்றுள்ள மோசடிகள் நிரூபணமானால் எதிர்காலத்தில் எயார் பஸ்களை இந்த நிறுவனங்களில் இருந்து எம்மால் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்படலாம். அத்துடன் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் கடந்த நவம்பர் மாதம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் பின்னரான நடவடிக்கைகள் எமக்கு தெரியாது என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எயார் பஸ் கொள்வனவு தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

.அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

எயார் பஸ் கொள்வனவு தொடர்பான அறிக்கையை 2017ஆம் ஆண்டு சிங்கப்பூரிடம் நாம் கோரியிருந்த போதிலும் முதலாவது அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதம்7ஆம் தகதி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு தெரியாது .  இதுதொடர்பில் எமக்கு தகவல்கள் இருக்கவில்லை. என்றாலும் குற்றப்புலனாய்வு பிரிவில் தகவல்கள் இருந்துள்ளன. இத்தகவல்களை ‘ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டெர்னெஷனல் சிறிலங்கா’ ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

அத்துடன் தரவுகளின் பிரகாரம் சிங்கப்பூர் மற்றும் சம்மந்தப்பட்ட நாடுகளில் இதுதொடர்பிலான தகவல்களை கோரினோம். சிங்கப்பூரில் குறித்த நிறுவனத்தின் பெயர் இருந்த போதிலும் அதன் உரிமையாளர் யாரென குறிப்பிடப்பட்டிக்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தான் இந்த தகவல்கள் இலங்கைக்கு சிங்கப்பூரிலிருந்து அனுப்பப்பட்டன. அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென எமக்குத் தெரியாது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40